செவ்வாய், 2 ஜூன், 2020

சித்திரச் சிரிப்பு! (காவடிச் சிந்து)




சித்திரம் போலவள் சிரிக்க – கண்
                   பரிக்க – மனம்
                    அரிக்க – உயர்
சிந்தையிலே அதைத் தரிக்க – நல்ல
சிறப்பாகவும் செழிப்பாகவும் செருக்காகவும் விருப்பாகவும்
சீரெடுத் துப்பாடி மகிழ்வேன் ! – அவள்
பேரெடுத்து ஆடி நெகிழ்வேன் !
.
நித்தமும் முன்வந்து பார்க்க – கரம்
                    கோர்க்க – உயிர்
                    ஈர்கக – மனம்
நிம்மதி யாய்அதை ஏற்க – என்
நினைவலைகளும் கனவலைகளும் கடல்லையென நடம்புரிந்திடும்
நெஞ்சமெல்லாம் மழை பொழியும் – அந்த
வஞ்சியாலே கவி வழியும்!
.
எண்ணத்தில்  வந்த    பெண்ணேஎன்
                       கண்ணேமுகில்
                       விண்ணேவளர்
இன்பத்தைக் கொடுக்கும் மண்ணே! – உன்னை
இலையாகவும் கொடியாகவும் மலராகவும் கனியாகவும்
இறைவன் படைத்த எழிலே! – என்றும்
குறைவில்லாப் இன்பப் பொழிலே!

பண்ணுக்குள் உன்னைநான் தீட்டஇசை
                          மீட்ட - கவி
                          கூட்டநம்
பைந்தமிழ்    அமுதை   ஊட்டகரு
பறந்தேவர அருகேயுற உறவேபெற உயிரேயெனப்
பண்புடன் எழுத்தில் கொஞ்சும்! – அதைக்
கண்டிட ஆடுமென் நெஞ்சம்!
.
பாவலர் அருணா செல்வம்
(என்கம்பனுக்குக் ணினி விடு தூது“ என்ற நூலிலிருந்து…..)