நிலைபோல் வாழ்க்கை இருக்குமென்றே
நிமிர்ந்த நெஞ்சாய் வலம்வருவர்!
விலைபோல் ஏறி இறங்காமல்
விதியை வெல்வோம் எனநினைப்பர்!
அலைபோல் ஆட்சி வந்துபோயும்
ஆளும் வழக்கை மாற்றமாட்டார்!
இலைபோல் மரத்தில் தலையசைக்கும்
இனமாய் நம்மை எண்ணிடுவார்!
மலைபோல் உயர்ந்த மனமுடையோர்
மறுவி விட்டார் நம்மிடையே!
சிலைபோல் நாமும் நின்றிருந்தால்
சின்னப் புழுவும் சீறியெழும்!
உலைபோல் கொதித்த மனத்துடனே
ஒன்றி ஓங்கிக் குரல்கொடுத்தால்
தலைபோல் இருந்த வாலெல்லாம்
தாவிக் குதித்தே ஓடிவிடும்!!
அருணா செல்வம்.
