நகைச்சுவை. படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை. படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 அக்டோபர், 2013

உங்கள் மனைவி போல! (சிரிக்க-சிந்திக்க)




டாக்சியின் மீட்டர்! (நகைச்சுவை)

   ஓர் ஜப்பானியர் இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்திருந்த போது ஒரு டாக்சியில் பயணம் செய்தார்.
   டாக்சியை மெதுவாக ஓட்டிச் சென்றார் டிரைவர். அதைக் கண்ட ஜப்பானியர், “என்ன டிரைவர் டாக்சி இவ்வளவு மெதுவாகச் செல்கிறது? எங்கள் ஜப்பானில் எல்லாம் எவ்வளவு வேகமாகச் செல்லும் தெரியுமா? பறக்கும்!“ என்றார்.
   டாக்சி டிரைவர் எதுவும் பேசாமல் கரை ஓட்டினார்.
   பயணம் முடிந்து டாக்சியை விட்டு இறங்கிய ஜப்பானியப் பயணி அதிர்ந்தார்.
   மீட்டர் 1000 ரூபாய் காட்டியது.
   “என்ன டிரைவர் இது? மீட்டர் 1000 ரூபாய் காட்டுகிறதே!“ என்று ஆச்சர்யமாகக் கேட்டார் ஜப்பானியர்.
   “இந்த மீட்டர் உங்கள் ஜப்பானில் செய்தது சார்!“ என்று அமைதியுடன் பதிலளித்தார் டாக்சி டிரைவர்.

-----------------------------------------------------------
உங்கள் மனைவி போல!  (நகைச்சுவை)


   ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு முன், ஒரு நாள் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
   பெட்டியில் அவருக்கு அடுத்து ஓர் இளம்பெண் அமர்ந்திருந்தாள்.
   ஆப்ரஹாம் லிங்களுக்குப் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. ஆகவே அவர் புகைப்பிடிக்க எண்ணினார்.
   அவர் அந்த இளம் பெண்ணைப் பார்த்து, “பெண்ணே... நான் புகைபிடிக்க விரும்புகிறேன். உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே?“ என்று மரியாதையுடன் கேட்டார்.
   அதற்கு அந்த இளம் பெண், “வீட்டில் உங்கள் மனைவியின் முன்பு எவ்வளவு அடக்கமாகப் புகைப்பிடிப்பீர்களோ அந்த மாதிரி புகை பிடியுங்கள்!“ என்று கூறினாள்.
   “என் மனைவியின் முன்னால் நான் புகை பிடிப்பதில்லை!“ என்றார் ஆப்ரஹாம் லிங்கன்.
   “அப்படியா...! தயவு செய்து ரெயிலை விட்டு இறங்கும் வரை என்னை உங்கள் மனைவியாக நினைத்துக் கொள்ளுங்கள்!“ என்றாள் அவள்.
   புகைபிடிக்க வேண்டாம் என்பதை அவள் இவ்வளவு நாசூக்காகச் சொல்லுவாள் என்று எதிர்ப்பார்க்காத ஆப்ரஹாம் லிங்கன், புகைப்பிடிக்காமல் பயண இறுதிவரை நாகரீகமாகவே நடந்து கொண்டார்.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

வேலைக்கு உத்திரவாதம்! (நகைச்சுவை)




 


   ஒரு டாக்டரின் வீட்டில் குழாய் ரிப்பேர் ஆகிவிட்டது. அதைச் சரி செய்ய வந்த ப்ளம்பர் வேலையை முடித்துவிட்டு 200 ரூபாய் கூலி கேட்டார்.
   அதற்கு டாக்டர், “என்னப்பா இது! நானே ஒரு பேஷண்டுக்கு 100 ரூபாய் தான் ஃபீஸ் வாங்குகிறேன். நீ 200 ரூபாய் கேட்கிறாயே?“ என்றார்.
    அதற்கு ப்ளம்பர், “ஆமாம் சார். ஆனால் நான் என் வேலைக்கு இரண்டு வருடம் உத்திரவாதம் (கியாரண்டி) கொடுக்கிறேன். உங்களால் இந்த மாதிரி உத்திரவாதம் தர முடியாது இல்லையா... அதனால் தான் என் கூலி 200 ரூபாய்“ என்றார்.
    அதைக்கேட்ட டாக்டர் பேசாமல் 200 ரூபாயைக் கொடுத்து அனுப்பினார்.

-படித்ததைப் பகிர்ந்தேன்-



தமிழே வென்றது...! (கவிதை)


அலைபோல் ஓயா இரும்பலினால்
    அமைதி அற்ற ஓய்வின்று!
சுளைபோல் சொற்கள் இருந்தாலும்
    சோர்வாய்ப் படுக்கை தேடிடுது!
வலைபோல் பின்னும் என்மனமோ
    வடிக்கக் கவிதை எண்ணிடுது!
உலைபோல் உடம்பு கொதித்தாலும்
    உயர்ந்த தமிழே வென்றிடுது!

அருணா செல்வம்.