பணிவோடு பாடினேன்
பாட்டு!
.
வேங்கடவா
என்றுன்னை வேண்டிவந்தால் வேதையெல்லாம்
வாங்க அனுதினமும்
வந்திடுவாய்! - தூங்கும்
பணிகளை ஓங்கி
உயிர்ப்பாக் குமுனைப்
பணிவோடு பாடினேன்
பாட்டு!
.
பாவலர் அருணா
செல்வம்
16.04.2021
.
பாடல் 70 எழுத்து 67
கதம்ப வலை
பணிவோடு பாடினேன்
பாட்டு!
.
வேங்கடவா
என்றுன்னை வேண்டிவந்தால் வேதையெல்லாம்
வாங்க அனுதினமும்
வந்திடுவாய்! - தூங்கும்
பணிகளை ஓங்கி
உயிர்ப்பாக் குமுனைப்
பணிவோடு பாடினேன்
பாட்டு!
.
பாவலர் அருணா
செல்வம்
16.04.2021
.
பாடல் 70 எழுத்து 67
பதியாகக்
காக்கும் கணபதியே!
.
தாயே
உன்துதிக்கை தருமே பலமே!
மாயே உனைவணங்க
மாறிடும் வினைகளே!
பூவே கொடுக்கும்
போதை எமக்கு!
நாவே காக்கும்
கானக் கவியே! நீயே
விதிமணி மதிவான்தேன்!
வா!நின்மேன் நியாதி
பதியாகக்
காக்கும் கணபதியே!
.
பாவலர் அருணா
செல்வம்
14.04.2021
பாடிடப் பாடுவாள் பன்னிசை
யோடே!
.
ஏடே
இன்வாயோ ! எழுத்தே இசையமுதோ!
பீடே
பின்னிய பெருமொழியோ நற்றேன்!
இன்பம்
பெருகிடு மின்பண் தமிழால்
துன்பம்
துள்ளியே தோய்ந்துட னோடும்!
வான்தரும் வளம்போல் கூடும் நலமெலாம்!
தேன்போல்
பாமகள் தின்றிடு மினிப்பை
ஓடியோடித்
தேட,வுயிர்த் துடிக்கும் பாவைநீ
பாடிடப்
பாடுவாள் பன்னிசை யோடே!
.
பாவலர்
அருணா செல்வம்
10.04.2021
.
தேடிய
காதல் திகட்டியதோ என்றழுது
வாடி
வதங்கியதும், வந்துநின்று - பாடினான்!
கூடிக்
குழைவதிலும் ஊடுதல் இன்பமென்றே
மூடி
மறைத்தாள் முகம்!
.
பாவலர்
அருணா செல்வம்
02.03.2021
என் ஆசிரியர் பாட்டரசர் கி. பாரதிதாசன் அவர்கள், என் “அணி இலக்கணம்“ என்ற நூலுக்காக அளித்த பாராட்டுக் கவிதையை உங்கள் முன் படைப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
.
அணிமேல் ஆசை அகமேவி
அருணா செல்வம் இந்நூலைப்
பணிமேல் பணிகள் சிறப்பனபோல்
பாங்காய்ப் படைத்தார்
வாழ்த்துகிறேன்!
மணிமேல் காணும் நல்லழகாய்
மனத்தை மயக்கும்
வெண்பாக்கள்!
அணைமேல் அணையாய்த்
தமிழ்காக்கும்!
அறிஞர் போற்றும்
புகழ்சேர்க்கும்!
அருமைத் தண்டி ஆரமுதை
அருணா செல்வம் தினம்பருகிப்
பெருமை பெருகும்
இந்நூலைப்
பேணிப் பெற்றார்
வாழ்த்துகிறேன்!
கருணை கமழும் கோவிலெனக்
கருத்தைக் கவரும்
வெண்பாக்கள்
அருணை அப்பன் அடிகாட்டும்!
அகிலம் போற்றும்
அறமூட்டும்!
அல்லும் பகலும் தமிழழகை
அருணா செல்வம் தலைசூடி
வெல்லும் வல்ல திறமேந்தி
விளைத்தார் இந்நூல்
வாழ்த்துகிறேன்!
சொல்லும் பொருளும்
சுவையேந்திச்
சுரக்கும் தூய வெண்பாக்கள்
செல்லும் இடத்தில்
சீர்மீட்டும்!
சிறப்பே மின்னும்
பேர்கூட்டும்!
அன்னைத் தமிழின்
திருவடியை
அருணா செல்வம் கைப்பற்றிப்
பொன்னை நிகர்த்த
இந்நூலைப்
புனைந்தார் நன்றே!
வாழ்த்துகிறேன்!
முன்னைப் புலவர்
புலமைநலம்
முற்றி மணக்கும்
வெண்பாக்கள்
தென்னை நீராய்க்
குளிரூட்டும்!
பின்னை உலகுக் கெழிற்சூட்டும்!
அறமே ஓங்கும் வண்ணத்தில்
அருணா செல்வம் கவிகற்றுத்
திறமே ஓங்கும் இந்நூலைத்
தீட்டித் தந்தார்
வாழ்த்துகிறேன்!
மறமே ஓங்கும் வண்டமிழின்
மாண்பை வார்க்கும்
வெண்பாக்கள்
நிறமே ஓங்கும் மொழிசூட்டும்!
நிலமே ஓங்கும் வழிகாட்டும்!
.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம்
பிரான்சு
07.05.2020
.
மனம்படைத்த மாந்தரெல்லாம்
அமைத்த வீடு
…………மற்றவர்க்கும் உதவிடவே
கட்டி வைத்தார்!
இனம்செழிக்க வேண்டுமென்றே
நெஞ்சம் கொண்டே
…………இருபக்கத் திண்ணைவைத்தே
உதவி செய்தார்!
தினம்நடக்கும் நிகழ்ச்சியாவும் ஓய்வு கொள்வோர்
…………திரைக்காட்சி போல்சொல்லி
மகிழ்ந்து போவார்!
கனம்நெஞ்சில் இல்லையன்று ! திண்ணை வீட்டைக்
…………காட்டுகின்ற ஒற்றுமையின்
உயர்வாய்க் கொள்வோம்!
.
பாவலர் அருணா
செல்வம்
18.01.2021