ஞாயிறு, 11 மே, 2014

அன்னை!!





அன்னை என்றதும்
   அமிர்தமாய் இனிக்குதே
       அழகிய நீரூற்று!
தன்னில் வைத்தெனைத்
   தழுவிடும் உணர்வெலாம்
       தருவதே உன்பாட்டு!
விண்ணில் வந்தவள்
   விருப்பமாய் இருப்பவள்
       விளைத்திடும் சீராட்டு!
மண்ணில் வாழ்ந்திடும்
   மாபெரும் தெய்வமே
       மகளெனைத் தாலாட்டு!

அருணா செல்வம்.
11.05.2014

(மா – கூவிளம்- விளம்- விளம்- விளம்- காய் அமைந்த அறுசீர் விருத்தம்.)

17 கருத்துகள்:

  1. சிறந்த பகிர்வு
    இன்றைய நாளில் - எம்மை
    ஈன்ற அன்னையைக் கொஞ்சம்
    மீட்டுப் பார்ப்போம்!

    அன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய வாருங்கள்!
    http://paapunaya.blogspot.com/2014/05/blog-post_11.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  2. அன்னையர் தின வாழ்த்துப்பா அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  3. அன்னைக்கு வாழ்த்து இனிமை !
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  4. அன்னையைப் போற்றும் அருமையான பா .உங்களுக்கும் என்
    அன்னையர் தின வாழ்த்துக்கள் தோழி அருணா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  5. // மண்ணில் வாழ்ந்திடும் மாபெரும் தெய்வமே// வேறெங்கும் தேடவேண்டாம்...!

    அன்னையர் தின வாழ்த்துக்கள்...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நைனா.

      நீக்கு
  6. அழகிய கவிதை படைத்து.....கடைசியில் (மா – கூவிளம்- விளம்- விளம்- விளம்- காய் அமைந்த அறுசீர் விருத்தம் என்று ஏதோ பதிவிட்டு இருக்கீங்க அது என்ன உங்க குழந்தை எழுதிய கவிதையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என் குழந்தை எழுதியது இல்லைங்க.
      நான் குழந்தையா இருந்தப்ப எழுதியது.

      அதாவதுங்க.... என் ஆசிரியர் இந்த இலக்கணத்தைக் கொடுத்து இயைபுடன் கூடிய பாடலை எழுது என்றார்.
      நானும் எழுதினேன். இந்த இலக்கணம் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. அதிலும் இயைபுடன் எனும் போது மிகவும் கடினமாக எனக்கு இருந்தது.
      நேற்று இந்தியாவில் அன்னையர் தினம் என்று படித்தேன்.
      உடனே இந்தப் பாட்டை எடுத்துப் பதிவிட்டுவிட்டேன்.
      அறுசீர் விருத்த இலக்கணம் தெரிந்தவர்கள் இது என்ன வகை என்பதை அறியவே அதையும் சேர்த்து வெளியிட்டுவிட்டேன்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் கேள்விக்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  7. அருமை...

    அன்னையர் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  8. அறுசீர் விருத்தத்தில் அழகிய வாழ்த்துப்பா அருமை அருணா.............

    பதிலளிநீக்கு