வெள்ளி, 11 அக்டோபர், 2013

சோலையின் ஏக்கம்!!





மீனோடு போட்டியிடும் கண்கள் மின்னும்!
   மென்நடையைக் கண்டுநாணி அன்னம் ஓடும்!
தேனோடு கலந்திருக்கும் பழங்கள் தோற்கும்,
   தெளிதமிழால் அவள்பேச இனிப்பே முந்தும்!
வானோடு வகைமாறும் மேக வண்ணம்
   வடிவழகில் மாற்றமிடும், அவளைக் கண்டால்
மானோடு மயிலாடும் சோலை ஏங்கும்
   மலர்ப்பாதம் தன்மீது படுமா என்றே!!

அருணா செல்வம்
11.10.2013

23 கருத்துகள்:

  1. வணக்கம்

    மீனோடு போட்டியிடும் கண்கள் மின்னும்!
    மென்நடையைக் கண்டுநாணி அன்னம் ஓடும்

    கவிதையின் வரிகள் அற்புதம் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    என் வலைப்பக்கம் என் பதிவு....வாருங்கள்....வாருங்கள்
    http://2008rupan.wordpress.com/2013/10/11/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0/

    பதிலளிநீக்கு
  2. இப்பலாம் அவளின் மலர்ப்பாதம் ஷாப்பிங்க் மால்லயும், சினிமா தியேட்டர்லயும்தான் படுது அருணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனாலதாங்க “சோலை ஏங்குகிறது“ என்று சொன்னேன்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  4. மீனும் மானும் தேனும் வானும் போட்டியிட்டுப் பொறாமைகொள்ளும் அழகிதான் படத்தில்..:)

    அருமை! அழகிய எண்சீர் விருத்தம்!

    வாழ்த்துகள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  5. அருமையான கவிதை
    படித்து ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சௌந்தர்.

      நீக்கு
  7. அருமையான கவிதை. படமும் போட்டி போடுகிறது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தைப் பார்த்துவிட்டு தான் கவிதை எழுதினேன்.
      ஆனால் படத்தில் அவள் எதையோ பார்த்து ஏங்குவது போல் இருந்தாலும் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இப்படி மாற்றி எழுதினேன்.
      நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  9. வாசித்தேன்!
    ஏனோ!
    வாய் இனித்தது..!

    அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐ..... அப்படியா...?
      இனிமேல் சர்க்கரை வியாதி உள்ளவர்களை என் கவிதையைப் படித்துக்கொண்டே சாப்பிட சொல்லாமா...?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு
  10. படம் மற்றும் கவிதை பிரமாதம்!

    Plus 1 வோட்டு போட்டுட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பள்கி... எனக்கு ஓட்டு போட்டிங்களா....? சூப்பர்!

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நம்பள்கி.

      நீக்கு
  11. கவிவாணி என்று பட்டமளிக்கலாம் போல உங்களுக்கு..அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. (கவிவாணி.அருணா செல்வம் - ஹா ஹா ஹா...

      நீங்கள் பட்டம் கொடுப்பதற்கு முன்பே சொல்லிப் பார்த்தேன். நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் அதிகப்படியாக இருப்பது போல் தெரிகிறது.)

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

      நீக்கு
  12. //தேனோடு கலந்திருக்கும் பழங்கள் தோற்கும்,
    தெளிதமிழால் அவள்பேச இனிப்பே முந்தும்!// ரசித்தேன்.
    அருமையா கவிதை!
    +1 செய்யாமல் இருக்க முடியுமா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கிரேஸ் அவர்களே.

      நீக்கு