திங்கள், 17 மார்ச், 2014

மறந்து விட்டேன்...!!





செவ்வாய் திறந்து
நீ உதிர்க்கும்
பூவெல்லாம்
எனக்கு வேதமடி!

இறந்து விடு
என்று நீ
சொல்லி இருந்தாலும்
இறந்து விடுவேன்
உன் நினைவுடன்!

மறந்து விடு
என்று சொன்னாய்
மறந்து விட்டேன்
மறுகணமே..
உன் சொல்லை!!

அருணா செல்வம்.

27 கருத்துகள்:

  1. அப்படிச் சொல்லுங்க...! முடியுமா என்ன...? வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  2. மறந்து விட்டேன்
    மறுகணமே..
    உன் சொல்லை!!
    >>
    சண்டையே வராது.

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதை
    மறக்க முடியாதபடி
    சொல்லிச் சென்றவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  4. இறக்க முடிந்தாலும், மறக்க முடியுமா.....

    அருமை...

    த.ம. +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி புவனி பாலன்.

      நீக்கு
  7. பிரிந்துவிடு என்று சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பேன்? யோசிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன சொல்லி இருப்பீர்கள்....?
      யோசித்துச் சொல்லுங்கள் ஸ்கூல் பையன்.

      நீக்கு
  8. அது தானே உண்மைக் காதலை மறப்பதெப்படி ?! அருமையான ¨
    கவிதை வாழ்த்துக்கள் தோழி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  9. “தையல் சொல் கேளேல்” என்ற
    தையல் அவ்வையின்
    இந்தச் சொல்லை மட்டும்
    நாம் கேட்க வேண்டியதிலலை
    என்பது போல...
    இறந்துவிடு என்றாலும்
    மறந்துவிடு என்றாலும்
    ஒன்றுதான்-
    கேட்க வேண்டியதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா.

      எவ்வளவோ நல்ல நல்ல கருத்தக்களைச் சொன்ன ஔவை இந்த வாக்கியத்தையும் சொல்லி இருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
      எனக்கென்னமோ “தையல் சொல் கேளேல்“ என்பதை அவர்கள் “தையல் சொல் கேளீர்“ என்றோ “தையல் சொல் கேளாய்“ என்றோ தான் சொல்லி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
      அவரும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு “பெண்களின் பேச்சைக் கேட்காதீர்கள்“ என்று சொல்லி இருந்தால் அவரின் எந்தப் பாடலுக்கான நல்ல நல்ல பொருளையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை என்பது அவரும் உணர்ந்திருக்க மாட்டாரா...?

      அதனால் ஔவையின் “தையல் சொல் கேளேல்“ என்று சொல்லப்பட்டு வரும் வாக்கியத்தில் எழுத்துப்பிழை உள்ளது என்பது என் கருத்து.

      நன்றி கவிஞர் ஐயா.

      நீக்கு
  10. #மறந்து விடு
    என்று சொன்னாய்#
    இதை கேட்டபிறகும் உயிரோடு இருக்கலாமா ?
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சொல்லை மறந்துவிட வேண்டியது தான் நல்ல காதலனுக்கு அழகு!

      நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மாதேவி தோழி.

      நீக்கு
  12. இலக்கிய நயத்துடன்
    அமைதித் தீர்வா?
    அதேவேளை
    “தையல் சொல் கேளேல்” என்ற
    ஓளைவைப் பேச்சின்
    விளக்கமா?
    இனிய கவிதையை
    சுவைக்க முடிந்ததே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு