வியாழன், 13 ஜனவரி, 2022

பொங்கல் வாழ்த்து 2022 !

 


மழையைப்போல் கடும்வெயில்போல் குளிரைப் போல
            மாறாமல் வருகிறதே ஒவ்வொ ராண்டும்!
பிழையென்று சொல்வதற்கு யாரு மில்லை!
           பிடிக்கிறதோ கசக்கிறதோ மாற்ற மில்லை!
உழைக்கின்ற உயிர்களுக்கும் ஓய்வு வேண்டும்!
          ஒருநாளைத் திருநாளாய்க் காண வேண்டும்!
அழைக்காமல் வருகின்றாய் பொங்கல் என்றே!
         அன்புடனே வரவேற்போம் இல்லந் தோறும்!
.
நங்கையர்கள் மனம்மகிழ இல்லம் தன்னில்
         நாதனுடன் பிள்ளைகளும் சேர்ந்து நன்றாய்
 செங்கதிரோன் உதிக்கின்ற நல்ல நேரம்,
         செம்மையாக அடுப்பேற்றி பானை வைத்துச்
செங்கரும்புச் சாற்றினிலே செய்த வெல்லம்
         செந்நெல்லின் உமிபோக்கி அரிசி போட்டுப்
பொங்கலிட்டே இயற்கைக்கு நன்றி கூறிப்
         போற்றிடுவோம் தமிழருக்கென் றொருநாள் என்றே!
.
பாவலர் அருணா செல்வம்
14.01.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக