ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

மழலை மொழி!!





சின்னப் பூபோல்
   சிரிக்கும் வாயால்
      சிந்தும் மழலைமொழி
கன்னித் தமிழைக்
   கன்னல் தேனில்
      குழைத்த கவிதையடி!
உன்னில் இருந்து
   உலகை மறந்து
      உதிரும் சிரிப்பொலியோ
பொன்னை உருக்கிப்
   பூவில் நனைத்துப்
      பொழியும் இன்பமடி!!


அருணா செல்வம்.

27 கருத்துகள்:

  1. படமும் அதற்கான விளக்கமாக அமைந்த
    கவிதையும் மிக மிக அருமை
    இன்னும் எழுதி இருக்கலாமோ
    சட்டென முடிந்ததைப் போல இருந்தது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் இரமணி ஐயா.

      நீங்கள் சொன்னது போல் எழுதி இருக்கலாம் தான்.
      ஆனால் நேரம் தான் போதவில்லை.
      தவிர சின்ன கவிதைகளை நிறையபேர்
      விரும்பி இரசிக்கிறார்கள்.
      இருப்பினும் உங்களின் விருப்பதிற்கேற்ப
      இரண்டு மூன்று கவிதைகளாக எழுத முயற்சிக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      படம் இணையத்திலிருந்து எடுத்தேன்.

      நீக்கு
  2. மழலையின் சிரிப்பிலும் பேச்சிலும் மயங்காதவர் எவரும் உண்டோ? அழகுத் தமிழில் நீங்கள் உரைத்திட்ட மழலைக் கவிதையும் அதைப் போலத்தான் மனதைப் பறிக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் இரசித்து எழுதிய உங்களின் பின்னோட்டம்
      என்னை மேலும் மகிழ்வித்தது.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.

      நீக்கு
  3. என்றும் ரசிக்க வைக்கும் மொழி...

    அருமை வரிகள்... வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  4. ///சிரிக்கும் வாயால்
    சிந்தும் மழலைமொழி///

    அருணா! அட்டகாசமான வரிகள்! வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பள்கி.

      ரொம்பவே இரசித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
      வாழ்த்துக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  5. த.ம. 1. அந்த இரண்டு வரிகளுக்காக, உங்களுக்கு என் முதல் (PLUS) + ஒட்டு!

    நான் ஒரு கஞ்ச ஆசிரியன்; என் இடுகைக்கே நான் (PLUS) + ஒட்டு போடமாட்டேன்! என் இடுகை அவ்வளவு...!

    ஆனால், உங்களுக்கு ஒரு (PLUS) + ஒட்டு! அழகனா இரு வரிகள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடடடடா.....
      உங்கள் வலையுக வாழ்க்கையில்
      என் பாடலுக்காக முதல் ஓட்டு போட்டதைக்
      குறித்து மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன்.
      காரணம்...
      என் பாடலுக்கு நீங்கள் ஓட்டு போட்டப்பிறகு தான்
      உங்களுக்கும் ஓட்டுப் போடத் தெரியும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

      ஆமாம் .... நம்பள்கி... நீங்கள் தமிழ் பாடலை இரசிப்பீர்களா?
      டமில் மட்டும் தான் இரசிப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்.

      (இதெல்லாம் கலாய்ப்பு. கண்டுகாதீங்க)

      உண்மையில் எனக்கு “மெட்ராஸ் பாசை“ கத்துக் கொடுக்கிறேன்
      என்று சொன்ன உங்களிடமிருந்து நான் என் செம்மொழி தமிழில் எழுதிய கவிதையால் ஒரு ஓட்டு பெற்றுள்ளேன்... என்று
      நினைக்கும் பொழுதே பெருமிதம் அடைகின்றேன்.

      மிக்க நன்றி நம்பள்கி.

      நீக்கு
    2. முதலில் நான் என் இடுகைக்கே ஒட்டு போடமாட்டேன்..!
      இந்த வரிகள் எனக்கு மிக பிடித்ததன் காரணம்...
      ///சிரிக்கும் வாயால்
      சிந்தும் மழலைமொழி///

      என் மகன் வெகு சீக்கிரம் பேசினான்; அதனால், அவன் "எச்சையுடன்" சேர்ந்து வழியும் மழலை ஞாபகம் வந்தது.

      சிரிக்கும் வாயில்
      வழியும் மழலைமொழி


      நீக்கு
  6. பொன்னை உருக்கிப்
    பூவில் நனைத்துப்
    பொழியும் இன்பமடி!!

    மழலையை கொஞ்சும் இன்பத்திற்கு இணை ஏதுமில்லையே அழகு தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  7. தோழி...
    மழலை மொழி கட்டிக்கரும்பாய் இனிக்கிறது.
    வாழ்த்துக்கள்!

    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  8. படமும் கவிதையும் அருமை சகோ. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  9. மழலை மொழி இன்பம்தான்! இனிப்புதான்! அருமையான படைப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. பொன்னை உருக்கிப்
    பூவில் நனைத்துப்
    பொழியும் இன்பமடி!!

    சூப்பரா இருக்கு இந்த வரிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மலர் பாலன்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  12. குழந்தை சிரிப்பை மீறிய சொர்க்கம், மழலையை மீறிய இசை உண்டா?
    கவிதையும் படமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு