செவ்வாய், 22 ஜனவரி, 2019

இயைபு உருவகம். – 4




   பாடலில் பல பொருட்களை உருவகம் செய்யும் போது, அவை தம்முள் இயைபு உடையதாக வைத்து உருவகம் செய்வது “இயைபு உருவகம்“ எனப்படும்.

உ. ம்
சீர்முகச் செம்பூவும், செவ்விதழ்ச் செங்கனியும்
கூர்மூக்கு மொட்டையும் கொண்டிருக்கும் – பார்வை
கொடுக்கும் கணிவுடன் கொஞ்சிடும் வஞ்சி
நெடுநெஞ்சுள் நிற்பாள் நிறைந்து!

பொருள் – சீர்முகமாகிய செம்பூவும், செம்மை இதழாகிய செங்கனியும், கூரிய மூக்காகிய மொட்டும், கொஞ்சிடும் பார்வைதரும் கணிவும் கொண்டிருக்கும் பெண்ணானவள் நீண்ட வாழ்நாளில் என் உள்ளத்துள் நிறைந்து நிற்பாள்.
    பாடலில் செம்பூவும், செங்கனியும், மொட்டும், என உருவகம் இயைபு உடையதாய் வந்துள்ளது. தவிர, முகம், உதடு. மூக்கு ஆகியவற்றுள் தம்முள் இயைபு உடையதாகிய பூ, கனி, மொட்டு என வந்துள்ளதாலும் இது “இயைபு உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
23.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக