செவ்வாய், 29 ஜனவரி, 2019

முதனிலைக் குணத் தீவகம்! - 1






   பாடலில் குணத்தைக் குறிக்கும் சொல்லானது முதற்சொல்லாக வந்து பாடல் முழுவதும் சென்று பாடலின் பல இடத்திலும் பொருந்தி வருவதுமுதனிலைக் குணத் தீவகம்ஆகும்.

உ. ம் 
கருத்தது வானம் கருமுகில் தோன்ற
பொருளற்றோன் வீட்டின் புறனாய்! – கருவற்ற
பெண்ணின் மனமாய்! பெரும்பொருள் இல்லாத
பண்ணாய்! இருளுள் பதைத்து!

பொருள்கருமுகில் தோன்றியதால் வானம் கருத்தது. அப்படிக் கருத்ததால் பொருள் அற்றவனின் வீடுகளின் புறமும் கருத்தது. குழந்தைப்பேறு இல்லாதவள் மனமும் கருத்தது. பொருள் இல்லாத பாடலும் கருத்தது இருளைக் கண்டு.
    பாடலில்கருத்ததுஎன்பது குணம் பற்றி வந்த பண்புச் சொல். முதலில் இருக்கும் அச்சொல் பாடலின் இருக்கும் வீடு, மனம், பாடல் ஆகிய சொற்களோடும் இயைந்து பொருளைத் தந்துள்ளதால் இதுமுதன்நிலைக் குணத் தீவகம்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
30.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக