செவ்வாய், 22 ஜனவரி, 2019

இயைபில் உருவகம் – 5




   பாடலில் பலபொருள்களைத் தம்முள் இயையாமை வைத்து உருவகஞ் செய்வது “இயைபிலுருவகம்“ எனப்படும். (இயைபு உருவகத்தில் உருவகமும் பொருளும் தம்மில் இயைபு உடையதாய் அமைப்பது. இது இயைபு இல்லாமல் உருவகஞ் செய்வது)

உ. ம்
தோளிரண்டும் தூணாகத் தொன்னிதழ் அம்பாக,
நீளிரங்கும் கைகள் நெடுங்கடல்! – கேளிரண்டு
காது பிறையெழில்! கந்தனின் நாமத்தை
ஓதுவதால் நல்லுயர்வு உண்டு!

பொருள் – கந்தனின் தோள்கள் இரண்டும் தூணாகத், தொன்மையான உதடுகள் அம்பாக, நீண்டு இறங்கி இருக்கும் கைகள் நெடிய கடலாக, கேட்கும் காது பிறையின் எழிலாக உள்ள கந்த பெருமானின் நாமத்தை ஓதுவதால் நல்ல உயர்வுகள் நமக்கு உண்டு.
   தோள்கள், உதடு, கைகள், காது என வந்திருக்கும் பொருட்களில் இயைபு வந்தும், இதற்கு உருவகமாக வந்த தூண், அம்பு, நெடுங்கடல், பிறை ஆகியவை தம்முள் இயைபு இல்லாதவனாக வந்துள்ளதால் இது “இயைபில் உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
23.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக