வியாழன், 17 ஜனவரி, 2019

தொகைவிரி உருவகம்! – 3




பாடலில் ஆகிய என்ற மாட்டேற்றுச் சொல் தொகையாகவும், விரிந்தும் வருவது “தொகைவிரி உருவகம்“ எனப்படும்.

உ. ம்
பாம்பு படுக்கையா, பாய்அலை ஊஞ்சலா,
ஓம்புகரம் சாய்மரமாய், ஓய்வெழில் – மேம்படும்!
மேனிக் கரியவனின் மௌனமொழி மின்னுலகில்
வானின் மழையமுதின் வார்ப்பு!

பொருள் – பாம்பினைப் படுக்கையாகவும், பாயும் அலைகளை ஊஞ்சலாகவும், காத்திடும் கைகள் சாய்மரமாகவும், ஓய்வெடுக்கும் எழில் உயர்வானது. கருமை மேனியை உடைய திருமாலின் மௌனமாகிய மொழியானது வாழுலகில் வானிலிருந்துபெய்யும் மழையாகிய அமுதமாகும்.
   பாடலில் படுக்கையாக, ஊஞ்சலாக, சாய்மரமாக, என்பதில் ஆகிய, ஆ என விரிந்தும், மொனமொழி, மழையமுது என்பவை தொகையாகவும் உருவகம் வந்துள்ளதால் இது “தொகைவிரி உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
18.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக