திங்கள், 7 ஜனவரி, 2019

ஐய உவமை! - 11




பாடலில் உவமையையும் பொருளையும் கண்டு, அது தான் இதுவோ…. அல்லது இது தான் அதுவோ என்று புரியாமல் ஐயுறுவதுஐய உவமைஎனப்படும்.

உ. ம்
பூவிடத்தில் மொய்க்கும் புதுவித பொன்வண்டோ!
தாவியெனைத் தாக்கும்கண் தான்இதுவோ! – ஆவிக்குள்
சென்று அலைகழிக்க, செய்கை அறியாது
நின்று தவிக்கின்றேன் நீண்டு!

பொருள்பூவிடத்தில் தேனுக்காக மொய்க்கும் புது விதமான பொன்வண்டு தானோ, பார்வையால் என்னைத் தாக்கிவிடும் கண் தானோ ? என்று என் உயிருக்குள் நுழைந்து அலைகழிக்க, செய்யும் செயலறியாது நீண்ட நேரமாக தவிக்கின்றேன்.
வண்டாகிய உவமையையும், கண்ணாகிய பொருளையும் உறுதியாகத் தெரியாமல் இதுவோ இல்லை அதுவோ என ஐயமுடன் உரைத்ததால் இது ஐய உவமை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
07.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக