திங்கள், 7 ஜனவரி, 2019

அநியம உவமை! - 10




பாடலில் வரையறையின்றி ஒன்றிற்கு ஒன்றை உவமைக் கூறியப்பின், அந்த உவமைக்கு வேறொன்று இருந்தால் அதுவும் இதற்கு ஒக்கும் என்று கூறுவதுஅநியம உவமைஆகும். (அநியமம் -  வரையறையின்றி உரைப்பது)

உ. ம்
அத்தைமகள் பல்காட்ட ஆசைமனம் துள்ளிவிழும்
சித்தத்தில் சிக்கும் சிரிப்பொலி! – முத்தே
அவள்பற்கள்! அன்றி அதுபோல உள்ள(து)
எவையுமே ஒக்கும் இதற்கு!

பொருள்அத்தைமகள் பற்களைக் காட்டிச் சிரிக்கும் ஒலியால் ஆசை மனமானது துள்ளிக் குதிக்கும். அவளின் பற்கள் முத்துதான். அது இல்லையென்றாலும் முத்தை ஒத்திருக்கும் எவையுமே அவளின் பற்களுக்கு ஒக்கும் என்றதால் இது அநியம உவமை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
07.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக