செவ்வாய், 11 ஜூன், 2013

பெற்ற மனம்!! (சிறுகதை)




    அகிலாவின் கை கணவருக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தாலும் மனம் முழுவதும் தான் பெற்ற பிள்ளைகளின் மேலேயே இருந்தது.
    என்னவாச்சி இந்த இரண்டு பேருக்கும்? ஏதாவது கோபமாக இருக்குமா....? ஏன் கோபப்படணும்? நான் என்ன குறை வைத்தேன்? எதுக்காக இரண்டு பேரிடம் இருந்தும் இந்த இரண்டு வாரமாக ஒரு போன்கூட வரவில்லை? நாமே போன் பண்ணினாலும் எடுப்பதில்லையே...? என்னவாக இருக்கும்...?
   “என்ன அகிலா... குழம்பு வைக்க வில்லையா...? இந்த கூட்டைப் போட்டே சாப்பிடனுமா?“ கணவனின் குரல் கேட்டு நிமிர்ந்தாள். மனம் குழப்பத்தில் இருந்ததால் கணவருக்குச் சாதத்தைப் போட்டுவிட்டு குழம்பு ஊற்ற மறந்து இருந்தது தெரிந்தது.
   “இதோ... கத்திரிக்காய் குழும்பு வச்சேங்க“ சொல்லிக்கொண்டே சாதத்தில் கொஞ்சம் எடுத்து ஊற்றினாள்.
   “என்னம்மா... உப்புப் போட மறந்துட்டியா...?“ கணவன் கேட்டதும் உடனே ஒரு துளி குழம்பை வாயில் வைத்துச் சுவைபார்த்தவள்.... “ஆமாம்... உப்புப் போட மறந்துட்டேன். இதோ போடுறேங்க...“ சொல்லிக்கொண்டே கொஞ்சம் உப்பைப் போட்டு கலக்கிச் சாதத்தில் ஊற்றினாள். அவளையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரம் சாப்பாட்டைச் சற்று நகர்த்தி வைத்துவிட்டு நிமிர்ந்து மனைவியைப் பார்த்தார்.
   “அகிலா... என்னவாச்சி உனக்கு..? நானும் ரெண்டு மூனு நாளாக கவனிக்கிறேன்... ஏதோ யோசனையிலேயே இருக்கிறியே.... என்னத்தான் அது...? சொல்லு“ என்றார்.
    “அப்பா.... இப்பவாவது கேட்டீங்களே.... நீங்க கடையைத் தவிர வேற எதையும் யோசிக்கவே மாட்டீங்க... சொன்னாலும் எதையும் பெரிசா எடுத்துக்க மாட்டீங்க... அதனால தான் சொல்லலை.“ என்றாள்
   “சரி. இப்போ கேக்கிறேன் இல்ல... சொல்லு. என்ன பிரட்சனை...?“
   “அது ஒன்னும் இல்லைங்க. போன ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நமக்கு அறுவதாங் கல்யாணம் நடந்துச்சி இல்லையா...?“
   “ம்... இப்போ அதுக்கென்ன?“
   “அந்த விசேசத்திற்கு நம்ம பொண்ணும் பையனும் குடும்பத்தோட வந்தாங்க... அப்போ... கிராமத்து வீட்டுல இருந்து என் அம்மா அவங்களால வர முடியலை என்றாலும் எனக்கு பட்டுப்புடைவை உங்களுக்கு பட்டு வேட்டி கூடவே ஒரு பாவாடை சட்டையும் வாங்கி தம்பி கிட்டே கொடுத்திருந்தாங்க.“
   “ஆமாம்... இது தெரிஞ்ச விசயம் தானே...?“
   “விசயம் இருக்குதுங்க. அந்த பாவாடை சட்டையை நான், நம்ம பையனோட பொண்ணுக்குக் கொடுத்துட்டேன். அண்ணனோட பொண்ணுக்கு மட்டும் பாட்டி துணி எடுத்துக் கொடுத்தாங்கன்னு நம்ம பொண்ணுக்குக் கொஞ்சம் மனவருத்தம். ஏதோ அவங்களால முடிஞ்சது அவ்வளவு தான் போல. நீ கவலைப்படாதே....ன்னு அந்தப் பாவாடை சட்டையை விட நல்லதா உன் பொண்ணுக்கு நீயே எடுத்துக் குடுன்னு நான் அவளைச் சமாதானப் படுத்திவிட்டு கொஞ்சம் பணம் கொடுத்தேங்க. அதை மருமகளும் பார்த்தாள் தான். ஆனால் எதுவும் சொல்லவில்லை. ஆனால் விசேசம் முடிஞ்சி ரெண்டு வாரத்துக்கு மேல ஆவுது.... இன்னமும் ரெண்டு பேருகிட்டேருந்தும் ஒரு போன்கூட வரலைங்க... என்ன இன்னும் கோபம்ன்னு தெரியலை.... அது தான் ஒரே யோசனையா இருக்குதுங்க.“ என்றாள் அகிலா கன்னத்தில் கை வைத்தபடி.
    “இது தான் உன் கவலையா...? நான் சாய்ந்திரம் டவுனுக்குத் தான் போறேன். அப்படியே ரெண்டு பேரையும் நேராகப் பார்த்துவிட்டு வர்றேன். கவலைப்படாதே“ என்றார் ஆறுதலாக.
    இந்தச் சொற்களே அகிலாவிற்கு கொஞ்சம் பாரம் குறைந்தது போல் இருந்தது.

    இரவு டவுனுக்குப் போன கணவன் திரும்பி வந்ததும் அவசரமாக கேட்டாள் அகிலா.
   “என்னங்க... ரெண்டு வீட்டுக்கும் போனீங்களா...? என்ன சொன்னாங்க? நல்லா இருக்கிறாங்களா...? என்மேல என்ன கோவமாம்...? பிள்ளைகளுக்கு உடம்பு ஏதாவது சரியில்லையா...?“
    அவரைப் பதில் சொல்லவிடாமல் கேள்விமேல் கேள்வி கேட்டாள்.
    “அகிலா... நம்ம பொண்ணும் பையனும் குடும்பத்தோட நார்த் சைடு டூர் போயிருக்கிறாங்களாம். உங்கிட்ட சொன்னாங்களாமே...“
   அகிலா சற்று நேரம் யோசித்துவிட்டு...
   “ஆமாம்... சொன்னாங்க தான். நான் தான் அறுவதாங் கல்யாண வேலையில் மறந்துட்டேன்...“ என்று சொன்னவள், “சரி ஒரு போன் பண்ணி இருக்கலாம் இல்லையா....? நான் என்னவோ ஏதோன்னு பயப்படுவேன்னு தெரியாதா?“ தாயின் தவிப்புடன் கேட்டாள்.
   “நமக்கு போன் பண்ணினால் டவர் கிடைக்கலையாம். நம்ம பொண்ணோட மாமியார் சொன்னாங்க“ என்றார் சுந்தரம்.
   “சே... என்ன பிள்ளைகளோ... வேற யார்கிட்டேயாவது போன் பண்ணி சொல்லச்சொல்லி இருக்கலாம் இல்லையா...? இந்த ரெண்டு வாரமா இதுங்க கிட்டேர்ந்து எந்த தகவலும் வராம நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்“ புலம்பிக்கொண்டே இருந்தாலும், படுத்ததும் நிம்மதியுடன் தூங்கினாள்.

   மறுநாள் காலை தபால் காரன் கொடுத்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.
   அதில்..

   என் அன்பு மகள் அகிலாவிற்கும் மருமகனுக்கும் அனந்தக் கோடி ஆசிகளுடன் எழுதுவது. நலம் நலமறிய ஆவல்.
   உங்களின் அறுவதாம் திருமணம் நல்லபடியாக நடந்தது என்று தம்பி சொல்லிவிட்டுச் சென்றான். சந்தோஷமாக இருந்தது. உன் தம்பியிடம் கொடுத்தனுப்பிய புடைவை வேட்டி பிடித்ததா...? உங்களுக்கு அதிகம் செய்யத்தான் ஆசை. ஆனால் என் கையில் கிடைத்தப் பணத்தில் ஏதோ என்னால் முடிந்ததைச் செய்தேன்.
   அதில் ஏதேனும் குறையிருந்தாலும் மனதில் வைத்துக் கொள்ளாமல் எப்பொழுதும் போல் பக்கத்துப் பாய் கடைக்குப் போன் போட்டு பேசு. இந்த தள்ளாத வயதில் எனக்கு ஒரு போன்கூட பண்ணாமல் தவிக்க விடாதே. காத்திருக்கிறேன்.

                            அன்புடன் அம்மா.

   அம்மாவின் கடிதத்தைக் கண்டதும் தான்... தன் அம்மாவின் எண்ணம் மனத்துள் வந்தது. சே... நம் பிள்ளைகளையே நினைத்துக் கொண்டிருந்ததால் நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் நம் அம்மாவை மறந்து விட்டோமே.... என்ன பிள்ளை நான்?
    நாம் தவித்தது போல் தானே அவர்களும் தவித்து இருப்பார்கள்... என்ற எண்ணத்துடன் தொலைபேசியை நோக்கி அவசரமாக ஓடினாள் அகிலா.
      பெற்ற மனம் எப்பொழுதுமே பித்து தான்.

அருணா செல்வம்.
11.06.2013

41 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு
  2. மிகவும் நல்ல கருத்து. அருமையான கதை.

    நீ அடுத்தவரைக் குறைகூற உனது கை சுட்டுவிரலை அவரை நோக்கி நீட்டும்போது மீதி மூன்றுவிரல்கள் உன்னை நோக்கி இருக்கின்றன என்று படித்திருக்கின்றேன்.

    ஆக அடுத்தவரை குறைகூறுமுன் உன்னளவில் யாவும் சரியாக உள்ளதா என்பதை சுய பரிசோதனை செய்து பார்த்தல் வேண்டும் என்னும் கருத்தை இக் கதையில் வெகு சிறப்பாகப் பதிவுசெய்துள்ளீர்கள் தோழி!

    பாரட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அழகிய கருத்திற்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  3. மிக மிக அருமை
    தாயின் மன நிலையை சித்தரித்த விதம்
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  4. நெகிழ வைக்கும் சிறுகதை..... பாசத்தை தன் இடத்திலிருந்து பார்த்தால் தான் தெரியும் என்பதை உணர்த்திய விதம் அருமை..... நன்றி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  5. பெற்ற மனம் எப்பொழுதுமே பித்து தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  6. சூப்பர் அருணா! ஒவ்வொரு அம்மாவிற்கும் அவரவர் பிள்ளைகள் மீது கவனமும் அக்கறையும் இருக்குதே தவிர, தன்னைப் பெற்றவர்களை நினைப்பதே இல்ல. அருமையாச் சொல்லி அசத்திட்டீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.

      நீக்கு
  7. அவசரப்பட்டு புரிந்து கொள்வது இவ்வாறு தான்... பிள்ளை மனம் எப்போதும் பாறாங்கல்லு...

    நல்லதொரு கதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  8. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. தங்களின் பார்வைக்காக :

    காதல் காவியமானது ! புனிதமானது !! சிறப்பானது !!!

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Love-Special.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதல் காவியமானது ! புனிதமானது !! சிறப்பானது !!!
      சூப்பர் தலைப்பு!

      பார்த்துப் படித்தும் விட்டேன்.
      நன்றி.

      நீக்கு
  10. //பெற்ற மனம் எப்பொழுதுமே பித்து தான்.//

    அழகான படைப்பு. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

      நீக்கு
  11. வாழ்க்கை ஒரு வட்டம்... நம்மோட ஃபீலிங்க்ஸ் ஒரு பக்கம் ...நமக்கான ஃபீலிங்க்ஸ் இன்னொரு பக்கம்.... ஒன்றொயொன்று சந்திப்பதேயில்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மைதாங்க தோழி.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  12. அம்மா தான் உண்மையான தெய்வம் . தாயின் அருமை பலருக்கு தாயான பின்புதான் தெரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “தாயின் அருமை பலருக்கு தாயான பின்புதான் தெரிகிறது“
      அருமையாகச் சொன்னீர்கள் ராஜா அவர்களே.
      மிக்க நன்றி.

      நீக்கு
  13. பெண்ணோ ஆணோ திருமணம் ஆகுவரை தான் அம்மா அப்பா என்பதெல்லாம் ...பின்பு இப்படித்தான் மாறிவிடுகிறோம். சரியாக சொன்னீர்கள் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறகு தனக்கென்று ஒரு குடும்பம் வந்துவிடுகிறதே...

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  14. அருமையான கதை! அம்மாவின் எண்ண ஒட்டம் பொதுவானதுதான் என்று சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  15. அவரவர்களுக்கு அவர்கள் பிள்ளைகள் நலம் தான் பிரதானமாகத் தெரியும்.கால ஓட்டத்தில் பெற்றவர்களை மறந்து போவது அதிகமாகி விட்டதைக் கூறிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ராபட் ஐயா.

      நீக்கு
  16. சுருக்கமாய், நறுக்குக் கவிதை போல நறுக்குச்சிறுகதை. அருமையான கரு, சொன்னவிதமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி முனைவர் அவர்களே.

      நீக்கு
  17. பெத்த மனம் பித்து பிள்ளைமனம் கல்லு இது பழமொழி மட்டுமல்ல உண்மையும்கூட.ஆனாலும் அம்மாவின் அன்பை மறப்பவர் இறுதி நாட்களில் இதே நிலையை அனுபவிக்கும் நிலா வரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையான கருத்துங்க.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  18. பெற்ற மனம் எப்போதுமே பிள்ளைகள் நினைப்புதான் . அழகாக உணர்த்தி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மாதேவி தோழி.

      நீக்கு
  20. தாயின் தவிப்பை ஒரு அழகான கதையாக வெளிப்படுத்திவிட்டீர்கள். எதிர்பார்ப்புகள் இருக்குமிடத்தில் ஏமாற்றங்களும் இருக்கும் என்பதையும் காட்டியது இக்கதை. பாராட்டுகள் அருணா செல்வம்.

    பதிலளிநீக்கு
  21. கருத்துள்ள கதை அருணா.... பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு