செவ்வாய், 18 ஜூன், 2013

காதல் கடிதம் எழுதிக் கொடுத்தேன்!! (புனைவு)




    
 நான், நான்காக மடித்துக் கொடுத்தக் கடிதத்தை வாங்கியவன், என்னைப் பார்த்துக், “கண்மணி... அன்போட காதலன் நான்... நான் எழுதிய கடிதம்ன்னு... அப்படின்னு பழைய டைலாக்கையே போடலியே...“ என்றான்.
   நான் முறைத்ததும்... “சரி சரி முறைக்காதே...“ என்று சொல்லிபடி கடிதத்தைப் பிரித்தான். பிரித்தவன் படிக்காமல் “ஐயையோ.... இதுவா காதல் கடிதம்...? கால் பக்கத்துக்குக் கூட எழுதலை. இதை போய் காதல் கடிதம்ன்னு சொன்னா யாராவது ஏத்துக்குவாங்களா...? போச்சி. போச்சி... எல்லாம் போச்சி... மத்தவங்க எல்லாம் காதல் கடிதத்தைப் பக்கம் பக்கமா எழுதி தள்ளுறாங்க. வரிக்கு வரி வர்ணனை வேற... நீ என்னன்னா... இவ்வளோண்டு தான் எழுதி இருக்கிற. நான் இதைப் போய் கொடுத்தால் நிச்சயமா செலெக்ட் ஆக மாட்டேன்னு தெரிஞ்சிடுச்சி“ அழுவாத குறையாக சொன்னான்.
   எனக்குக் கோபமாக வந்தது. இவனுக்குக் காதல் வந்தது என்றால் இவனே காதல் கடிதம் எழுதனும். அதை விட்டுவிட்டு என்னிடம் வந்து கேட்டதே தப்பு. சரி போனால் போகிறது என்று எழுதிக் கொடுத்தால் அதைப் படிக்காமலேயே குறை சொல்பவனை என்ன செய்வது?
   நான் பேசாமல் அவனைப் பார்த்து முறைத்துக்கொண்டு இருந்ததைப் பார்த்து அவனே கேட்டான். “இதை எழுதறதுக்குத் தான் மூனு நாள் கேட்டியா...? நீ கேட்டதைப் பார்த்தா பக்கம் பக்கமா எழுதி குவிச்சி இருப்பேன்னு நினைச்சேன்.“ என்றான் ஒருவித ஏளனமாக.
    நான் சட்டென்று அவன் கையில் இருந்த கடிதத்தைப் பறித்துக்கொண்டேன். அதை இழந்ததால் அவன் எதுவும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை.
   நான் சொன்னேன். “காதல் கடிம்ன்னா... பக்கம் பக்கமா எழுதனும், நிறைய வர்ணிக்கனும் என்றெல்லாம் இல்லை. மனத்தில் பட்டதை நமக்குப் பிடித்தவரின் மனத்தில் படுமாறு எழுதினாலே போதும். உண்மையான அன்பிருந்தால் எதையும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு காகிதத்தில் “நான் உன்னை விரும்புகிறேன்“ என்று எழுதிக் கொடுத்தாலே போதும். அது தான் உண்மையான காதலருக்கு மிகப்பெரிய காதல் கடிதம்“ என்றேன்.
   “அதெல்லாம் சரிதான். ஆனால் நம்முடையக் காதலைக் கொஞ்சமாவது எடுத்து விளக்கிச் சொன்னால் தானே நாம் எவ்வளவு காதலிக்கிறோம் என்று தெரியும்“ என்றான் முணங்கலாக.
   “நானும் அதைத் தான் எழுதி இருக்கிறேன். முதலில் படிச்சிப்பாரு. கடிதத்தில் எவ்வளவு வரிகள் இருக்கிறது என்பது முக்கியம் இல்லை. அதில் உள்ள சொர்ப்ப வரிகளில் உள்ள வார்த்தைகளின் வீரியம் தான் முக்கியம்.“ என்றேன் சற்று கோபமாக.
   அவன் கடிதத்தை வாங்கி பிரித்துப் படித்தான். படித்தவன் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தான். சற்று நேரம் பேசாமலேயே இருந்தான். நானும் பேசாமலேயே இருந்தேன். திரும்பவும் படித்தான். திரும்பவும் என்னைப் பார்த்தான். “சும்மா சொல்லக் கூடாது... அருமை. என் மனசைத் தொட்டுடுச்சிப்பா...“ என்றான் நெகிழ்வாக.
   நான் கொஞ்சம் பெருமிதமாக நெளிந்தேன்.
   “ஆமாம்... உனக்கு எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது....? யாராவது உனக்கு எழுதிக் கொடுத்தாங்களா...?“ சந்தேகத்துடன் கேட்டான்.
   “இது தானே வேணாங்கிறது. ஏதோ சின்ன வயசுலேர்ந்து ஃபிரெண்டு. முதல் முறையா காதலிக்கப் போறதால கேட்டியேன்னு எழுதி கொடுத்தா.... நீ கேக்கமாட்டே... சரி சரி. இப்பவாவது சொல்லு. யார் கிட்ட கொடுக்கப் போறே?“ ஆவலாகக் கேட்டேன்.
   “நம்ம திடங்கொண்டு போராடு சீனு கிட்ட தான்“ என்றான் இலேசான புன்முறுவலுடன்.
   “என்னா...து சீனு கிட்டையா...?“ கண்கள் விரிய கேட்டேன்.
   “ஆமாம்... சீனு கிட்டே தான்“ என்றான் அவன் சிரித்தபடி.
   “டேய்... சீனு ஆம்பளைடா....“ என்றேன் அதிர்ச்சி மாறாமல்.
   “ஆமாம். ஆம்பளைதான். அதுக்கென்ன இப்போ.“ அவன் அலட்சியமாகச் சொல்ல நான் அவனைச் சந்தேகமாகப் பார்த்தபடி “டேய்.... அவனாடா நீ...“ என்றேன்.
    “ஏய்....“ என்றான் குரலை உயர்த்தி. சற்று நேரத்தில் புரிந்துகொண்டு... “சீச்சீ.... நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை. நம்ம திடங்கொண்டு போராடு சீனு, அவரோட வலையில “எழுத மறந்த காதல் கடிதம்“ என்ற தலைப்புல ஒரு போட்டி வைக்கிறார். அந்த போட்டியில கலந்துக்கத்தான் உங்கிட்ட காதல் கடிதம் கேட்டேன்.“ என்று விளக்கினான். எனக்குக் கொஞ்சம் மூச்சு சீரானது.
   “டேய்... போட்டிக்கா கேட்டே... ஒழுங்கா சொல்லி இருந்தால்... நல்லா வர்ணிச்சி பெரிசா எழுதி கொடுத்திருப்பேன். பேசாம... அந்த கடிதத்தைக் கொடுடா. வேற எழுதித் தர்றேன்.“ கையை நீட்டினேன்.
   “இல்லப்பா. இந்த கடிதமே போதும். இந்த கடிதம் பரிசு வாங்கினாலும், வாங்காவிட்டாலும் எனக்குக் கவலை இல்லை. என் மனசுக்குத் திருப்தியா இருக்கு. அது போதும் எனக்கு. நன்றிப்பா...“ சொல்லியபடி கடிதத்தைத் திரும்பவும் பிரித்துப் படித்துக்கொண்டே சென்றான்.

அருணா செல்வம்.
19.06.2013
  

30 கருத்துகள்:

  1. //கடிதத்தில் எவ்வளவு வரிகள் இருக்கிறது என்பது முக்கியம் இல்லை. அதில் உள்ள சொர்ப்ப வரிகளில் உள்ள வார்த்தைகளின் வீரியம் தான் முக்கியம்.“//

    ;)))))

    அருமையான கற்பனைக்கதை ! பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

      நீக்கு
  2. பயங்கர கடிதமா இருக்கும் போல கடிதத்திற்கு இரண்டு பதிவுகள் முன்னோட்டமா கலக்கல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயங்கர கடிதமா...? (கத்தி, குத்து, ரத்தம் எல்லாம் காதல் கடிதத்தில் பதிவாக்குவது தான் பயங்கர கடிதமோ......)

      என்னங்க ஃபிரெண்ட்... அவன் என்ன பேயிக்கா
      காதல் கடிதம் கொடுக்கப் போகிறான்....? அல்லது
      தீவிரமாக காதலிப்பதால் இப்படி தீவிரவாதி மாதிரி
      பயங்கரமா எழுதுவதா...? இது காதல் கடிதமாம்.
      அப்படியெல்லாம் பயங்கரமாக இருக்காது.

      நீங்கள் எழுதும் காதல் கடிதத்தில் பலபல பயங்கரங்கள்
      எல்லாம் வருமா....? காத்துக்கொண்டிருக்கிறேன்.

      நன்றி பாஸ்.

      நீக்கு
  3. நான் அப்பவே நினைச்சேன். இப்படி ஏதாவது பண்ணுவீங்கன்னு. அந்த கடிதத்தை வெளியிடலாமே!
    கடிதப் போட்டியை அருமையான கதையாக்கிட்டீங்க, அபாரத் திறமை உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க நினைத்தீர்கள் இல்லையா... அதனால் தான்
      நண்பரை ஏமாற்றக் கூடாது என்று வெளியிடவில்லை.

      ஆனால்....
      நிச்சயம் எழுதியதும் வெளியிடுகிறேன் மூங்கில் காற்று.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. அருமை அருமை
    அப்போ காதல் கடிதம் தனியா போயிருச்சா
    அதைப் படிக்கனுமே
    அடுத்த பதிவில் அந்த சுருக்கமான
    அருமையான மனம் சொல்லும்
    காதல் கடிதத்தை எதிர்பார்த்து....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பதிவில் வேண்டாம் ஐயா.
      இன்னும் நாள் இருக்கிறது யோசிப்பதற்கு.
      அதற்குள் இப்படி பல பதிவுகளை ஓட்டி விடுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  5. ஆகா... காதல் கடித்ததை வைத்தே ஒரு கடிதம்... ஆனால் சொன்ன விதம் நகைச்சுவையாக அருமை...

    வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  6. நல்ல கதை.......படித்தேன் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      (உங்களின் பதிவுகளை நான் படிக்க
      முடிவதில்லை. துள்ளுகிறது. வேறு
      ஒருவரின் வலைக்குள் சென்றுதான்
      படிக்க முடிகிறது. கொஞ்சம் பாருங்க.)

      நீக்கு
  7. /அவனாடா நீ//

    ஹா ஹா ஹா

    காதல் வரிகளை காப்பியடிக்கலாம்னு பாத்தா ஒண்ணுமேஇல்லை யே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் காப்பி அடிச்சிடுவீங்கன்னு தான்
      நான் பதிவில் போடவில்லை.

      நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  8. ஐயையோ! அருணா நீயும் எழுதிட்டியா கடிதத்தை?! நான் இன்னும் பிள்ளையார் சுழி கூட போடலியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பிள்ளையார் சுழி தாங்க.

      இனிமேல் தான் யோசித்து எழுதனும்.
      கவலைப்படாதீங்க. இன்னும் பல நாட்கள் இருக்கிறது.
      உங்களுக்கே வெற்றி கிடைக்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
      நன்றி ராஜி மேடம்.

      நீக்கு
  9. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தோழி காதல் கடிதம்
    எழுதி பரிசையும் வெல்லுங்கள் :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் நீங்கள் எழுதவில்லையா...?

      உங்களின் கடிதங்களை எல்லாம்
      படிக்கவே நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் தோழி.

      நன்றி தோழி.

      நீக்கு
  10. எப்படியோ இந்த போட்டி முடியறதுக்குள்ள நீங்க நிறைய கதை தேத்திடுவீங்க போல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேத்தனும்ன்னு தான் நெனச்சேன்.
      ஆனால் முடியலை தோழி.

      சரி. அடுத்து உங்களுக்காக ஒன்று ரெடி பண்ணுகிறேன்.
      நன்றி தோழி.

      நீக்கு
  11. நல்ல பதிவு.பழைய கடந்த ஞாபகமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியெல்லாம் பழைய கடந்த ஞாபகம் இல்லைங்க.

      வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  12. தோழி... நல்லபடியா நாசூக்கா நிறைய விஷயங்களை சொல்லீட்டீங்க. மிகவே திறமைசாலிதான்...:)

    ஆமா... நீங்க அப்ப உங்க கணவருக்கு கொடுத்த கடிதம்தானே இங்க இப்ப போட்டிக்குன்னு அந்தப் பையனிடம் கொடுத்தது...:))).

    ம்.ம். நல்லாத்தான் இருக்கு. வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அப்போ என் கணவருக்குக் கொடுத்தக்
      கடிதம் இது இல்லைங்க தோழி.
      அது வேற. இது வேற.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  13. கடிதம் தயாராகி விட்டதா?!நன்று,வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா.
      மூளையில் கொஞ்சம் உதிர்த்து இருக்கிறது.
      அதை வைத்துத் தயார் படுத்தி விடுகிறேன்.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      (நீங்கள் பேச நினைப்பதை நான் படிக்கவே
      முடிவதில்லை. எப்பொழுது தான் உங்களின் வலையை
      நான் படிக்க முடியுமோ... வருத்தத்துடன்...)

      நீக்கு
  14. பார்த்து விட்டேன்.

    மிக்க நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு