வெள்ளி, 7 செப்டம்பர், 2012

காக்கா குணம் !! (கவிதை)






காகம் கறுப்பாய் இருந்தாலும்
   கருத்தால் குணத்தால் கவர்ந்துவிடும்!
கா...கா... என்று பக்தியுடன்
   கடவுள் உணவை அதற்களிப்பர்!
காகம் கரைந்தே இனம்அழைத்து
   காணும் உணவைச் சேர்ந்துண்ணும்!
தேகம் கறுப்பாய் இருந்திடலாம்
   தெய்வ குணமே சிறப்பன்றோ!!


அருணா செல்வம்.

24 கருத்துகள்:

  1. காக்கையின் குணங்களை நயம்பட சொல்லியிருக்கிறீர்கள், பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தேகம் கறுப்பாய் இருந்திடலாம்
    தெய்வ குணமே சிறப்பன்றோ!!
    /////////////////////////////

    நல்லதொரு வசனம்...மனிதர்களில் சிலரும் இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  3. அட காகத்தை வைத்து ஒரு கவிதையா கலக்கல் பாஸ்

    பதிலளிநீக்கு
  4. அருமையான வரிகள். // காகம் கரைந்தே இனம் அழைத்து
    காணும் உணவைச் சேர்ந்துண்ணும்! // கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  5. /// தேகம் கறுப்பாய் இருந்திடலாம்...
    தெய்வ குணமே சிறப்பன்றோ... ///

    பிடித்த வரிகள்...

    பதிலளிநீக்கு
  6. காகம் சனியேஸ்வரன் வாகணம் அருமை கவிதை!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்

    காக்காய் என்று சிலபேரைக்
    கழித்தல் உண்டு! அதுவேறு!
    சோக்காய்க் காக்காய் படம்போட்டுச்
    சொன்ன கவிதை மிகஅருமை!
    சீக்காய் உள்ள சமுகத்தின்
    சீழைத் துடைத்து மருந்தேந்தும்
    நோக்காய் ஆக்கம் அமையட்டும்!
    நோஞ்ச உலகை நிமிர்த்தட்டும்

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kambane2007@yahoo.fr

    பதிலளிநீக்கு
  8. கடவுளுக்குரிய உணவை உண்பதால் தான் என்னவோ அதற்க்கு கடவுளுக்குரிய குணம் வந்துவிட்டதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் வரலாற்று சுவடுகள்.
      நன்றி.

      (நான் நினைத்தேன்.. காக்காய் பயந்து போய் தான்
      தன் இனத்தை அழைத்து உண்கிறது என்று. நான் நினைத்ததை எல்லாம் எழுதிவிட்டால் கவிஞர். பாரதிதாசன் போன்றோர்கள் வலைக்குள் வந்து மேலும் திட்டுவார்கள் என்று தெரியும். ...)

      நீக்கு
  9. நல்லதொரு படைப்பு! பகிர்வுக்கு நன்றி!

    இன்று என் தளத்தில்
    அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html

    சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html

    பதிலளிநீக்கு
  10. தேகம் கறுப்பாய் இருந்திடலாம்
    தெய்வ குணமே சிறப்பன்றோ!!//

    நிச்சயமாக
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. நிறத்தை வைத்து மனதை எடைபோடமுடியுமா?நல்லதொரு கவிதை அருணா !

    பதிலளிநீக்கு