திங்கள், 23 பிப்ரவரி, 2015

அழுகை!!



அடித்தாலும் அழுகைவரும்! சொல்லும் வார்த்தைத்
    தடித்தாலும் அழுகைவரும்! பாசம் பொங்க
நடித்தாலும் அழுகைவரும்! தவற்றைக் காட்டி
    இடித்தாலும் அழுகைவரும்! மேனி நோயால்
துடித்தாலும் அழுகைவரும்! துன்பம் தாங்க
    முடியாமல் அழுகைவரும்! கதையில் மூழ்கிப்
படித்தாலும் அழுகைவரும்! கண்ணீர் பொங்கி
    வடிக்கின்ற அழுகையாவும் விதியே செய்யும்!!

அருணா செல்வம்.

24.02.2015

8 கருத்துகள்:

  1. அழுகைக்குப் பல காரணங்கள்! ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது..."சிரித்தாலும் கண்ணீர் வரும்.... அழுதாலும் கண்ணீர் வரும்.."

    பதிலளிநீக்கு
  2. அழுகை உணர்வின் வெளிப்பாடு அன்றோ
    அருமை
    தம +1

    பதிலளிநீக்கு
  3. அழகான அழுகை...ஆமாம் ஏன் இந்த அழுகை

    பதிலளிநீக்கு
  4. அடேங்கப்பா அழுகைக்கு காரணங்கள்....ம்ம் வரிகள் அருமை....அது சரி பாசம் பொங்க நடித்தாலும்??!!!!

    பதிலளிநீக்கு
  5. உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!

    பதிலளிநீக்கு