திங்கள், 2 டிசம்பர், 2013

ஐம்பது சதவிகித முட்டாள்கள்!! (சிரிக்க-சிந்திக்க)


   உலகில் கம்யுனிஸ சித்தாந்தத்தை ஏற்படுத்தியவர், ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் மார்க்ஸ் (Karl Marx . 1818-1883 ) இவரும் இவரது நண்பருமான ஃபிரெடரிக் ஏங்கெல்ஸீம் (Friedrich Engels) இணைந்து எழுதிய “டாஸ் கேபிடல்“ என்ற நூல் உலகப் புகழ் பெற்றது. இந்நூலை “கம்யுனிஸத்தின் பைபில்“ என்றும் குறிப்பிடுவர்.
   திடீரென ஏற்படும் சிக்கலில் இருந்து விடுபடுவதில் கைதேர்ந்தவர், கார்ல் மார்க்ஸ்.
   ஒரு சமயம் அமெரிக்காவில் செனட் சபையில் பேசுவதற்காக கார்ல் மார்க்ஸ் அழைக்கப் பட்டிருந்தார்.
   உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றி பேசுவதில் கார்ல் மார்க்ஸ் வல்லவர்.
   அவர் தன் பேச்சினூடே, “அமெரிக்கர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் முட்டாள்கள்“ என்றார்.
   அதைக்கேட்ட செனட் சபையே ஒரு கணம் ஆடிப்போய் விட்டது.
   எங்கும் கூச்சல் குழப்பம் எழுந்தது.
   “அமெரிக்கர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் முட்டாள்கள்“ என்று நீங்கள் பேசியதை உடனே வாபஸ் பெற வேண்டும்“ என்று பலர் கத்தினர்.
   உடனே கார்ல் மார்க்ஸ், “சரி சரி... அமைதியுடன் இருங்கள். அமெரிக்கர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் முட்டாள்கள் என்று நான் பேசியது தவறு என்று நீங்கள் கருதுவதால் நான் பேசியதைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அதனால் அவ்விடத்தில் அமெரிக்கர்கள் ஐம்பது சதவிகித்தனர் அறிவாளிகள் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்“ என்றார்.
   அதைக் கேட்ட கூட்டத்தினர், அடுத்து என்ன பேசுவது என்று தோன்றாமல் திகைத்துப் போய் நின்று விட்டனர்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

17 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி இன்றைய வானம்.

      நீக்கு
  3. பதிவர்களில் 50 சதவிகிதம் அறிவாளிகள்...அப்பாடா இப்ப நான் தப்பிச்சேன் tha.ma 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவர்களில்.....????

      நீங்கள் எந்த 50 சதவிகிதம் “உண்மைகள்“?

      நன்றி.

      நீக்கு
    2. நிச்சயம் அறிவாளிகள் பக்கம் கிடையாதுங்க

      நீக்கு

  4. அறிவின் ஆற்றல் கொண்டு இப்படியும் வெற்றி கொள்ளலாம்
    சில சிக்கலான தருணத்தில் என்று உணர்த்திவிட்டார் :))))
    சிறப்பான பகிர்விற்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் தோழி அருணா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி

      நீக்கு
  5. நல்ல சமயோசித புத்தி..உண்மைதான் அவரும் ஒரு அறிவாளிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

      நீக்கு
  6. க+
    இதையே ஒருவன் positive எண்ணம் கொண்டவன் அரை டம்ளர் காபி இருக்கு இதில் என்ற.. என்றால் negative எண்ணம் கொண்டவன் அரை டம்ளர் காலியாக இருக்கு என்பான்.

    பதிலளிநீக்கு