செவ்வாய், 15 மே, 2012

தமிழே வென்றது...! (கவிதை)



தமிழே வென்றது...! (கவிதை)

அலைபோல் ஓயா இரும்பலினால்
    அமைதி அற்ற ஓய்வின்று!
சுளைபோல் சொற்கள் இருந்தாலும்
    சோர்வாய்ப் படுக்கை தேடிடுது!
வலைபோல் பின்னும் என்மனமோ
    வடிக்கக் கவிதை எண்ணிடுது!
உலைபோல் உடம்பு கொதித்தாலும்
    உயர்ந்த தமிழே வென்றிடுது!

8 கருத்துகள்:

  1. உயர்ந்த தமிழே வெல்லும் தோழி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழியா..!
      தோழியா..!!
      தோழியா..!!!

      என்னங்க ஷேமாக்கா... என் கவிதைகளில் பெண்வாடை அடிக்கிறதா என்ன?
      சரிசரி.. எழுதுபவரின் கவிதைக்கும் கருத்திற்கும் என்ன பால் வித்தியாசம் இருக்கிறது?
      என்னவோ போங்க...
      உங்களுக்கு நான் தோழியாகவே இருந்துவிட்டு போகிறேன்.
      நன்றிங்க ஷேமா அக்கா!

      நீக்கு
  2. உண்மை கண்டிப்பா
    தமிழே வெல்லும்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா17 மே, 2012 அன்று AM 10:02

    வணக்கம் தமிழின் சுவையாய் உன்கவி கண்டேன் மகிழ்ந்தேன்! தமிழுக்குச் சோர்வில்லை உன்பூல்

    பதிலளிநீக்கு