வெள்ளி, 31 டிசம்பர், 2021

புத்தாண்டு திருப்பள்ளியெழுச்சி!

 



பொன்னெனும் பூமியில் பூதமாய்  வந்து
      பூவுடல் அழித்தது புதுவித தொற்று!
சின்னவர் பெரியவர் செய்நிலை மறந்து
      சிந்தனைக் கலங்கிடச் சிரிப்பினை இழந்தார்!
நன்மையும் நலத்தையும் நாடிடும் மாந்தர்
      நல்லொளிப் பிறந்திட நாளெலாம் வேண்ட,
பொன்னெழில் பூத்துடன் பொய்வினை அழிக்கும்
    புதியவாண் டே!பள்ளி எழுந்தரு ளாயே!
.
பாவலர் அருணா செல்வம்
31.12.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக