வெள்ளி, 28 ஜூன், 2019

ஏது அணி!



கரும காரகவேது !

கருமம் என்பதுகடமை, காரியம், கிரியை, செய்கை, முன்வினை, விதி,….

பாடலில் ஒரு கருமமே காரகமாகவும், அதுவே ஏதுவாகவும் வருவதுகரும காரகவேதுஎனப்படும்.  (ஒரு செயலின் செயல்பாட்டினைக் காட்டுவது)

. ம்
எத்தனை வேலை எடுத்ததைச் செய்தாலும்
அத்தனைக்கும் கை,கண்ணும் ஆழ்ந்திருக்கும் - பத்தியமாய்ப்
பெற்ற மனதெல்லாம் பிள்ளையை எண்ணுவதே
குற்றமற்ற அன்னை குணம்!

பொருள்ஒரு பெண்ணின் கைகளும் கண்களும் ஆழ்ந்து எத்தனை வேலைகளை எடுத்துச் செய்தாலும் அவளின் மனமானது தான் பெற்ற பிள்ளையையே எண்ணிக்கொண்டு இருக்கும். அதுவே தாய்மையின் குணம்.

பாடலில் கூறப்பட்ட கருமம் பெண்ணானவள் செய்யும் தொழில். அவளின் கையும் கண்ணும் தன் வேலையைச் செய்தாலும், மனமானது பத்தியம் இருந்து தான் பெற்ற பிள்ளையை எண்ணிடும் என்பது காரணமாவதால் இதுகரும காரகவேதுஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
26.06.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக