வெள்ளி, 14 ஜூன், 2019

வன்சொல் விலக்கணி!



முன்ன விலக்கணி!

பாடலில் வன்சொல் சொல்லி ஒரு செயலை விலக்குவது வன்சொல் விலக்குஎனப்படும். பொதுவாக இதிலிருந்து தொடரும் எட்டு விலக்கும் தோழி கூற்றாகவே உதாரணப் பாடலைக் கொடுத்துள்ளார்கள்.

. ம்
கருவேல முட்களெல்லாம் கால்களில் குத்தும்
திருமேனி நோயால் துவளும்! – அருவுயிர்ப்
போகும்! புதுவிடம் போகா(து) இருதோழி!
போகுமுயிர் நிற்கும் பொலிந்து!

பொருள் புது இடத்திற்கு போனால் கருவேலம் முள் கால்களில் குத்தும். அதனால் நோய் உண்டாகும். அழகிய மேனி துவண்டு கடைசியில் அரிய உயிரும் போய்விடும். அவ்விடம் போகாது இருந்துவிட்டால் உயிரானது நின்று வாழும்.
   ஓர் இடத்திற்கு செல்லும் தன் தோழியை, அங்கே போனால் முட்கள் குத்தும். நோய் வந்து சேரும். உயிர் போகும் என்ற வன்சொற்களைச் சொல்லி அந்த செயலை விலக்குவதால் இது வன்சொல் விலக்குஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
14.06.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக