திங்கள், 29 பிப்ரவரி, 2016

கோழிக்கறி குழம்பு!



தேவையானப் பொருட்கள்

வெட்டிய கோழிக்கறி - 1 கிலோ
பட்டை, கிராம்பு, இலை, பெருஞ்சீரகம் - கொஞ்சம்
உருளைக் கிழங்கு - கால் கிலோ.
வெங்காயம் பெரியது - இரண்டு
பச்சை மிளகாய் - மூன்று
தக்காளி  - மூன்று
இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
தனியா தூள் - 1  மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
பெருஞ்சீரகத் தூள் - 1 மேசைக்கரண்டி
கரம்மசாலா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணை - 4 மேசைக்கரண்டி

செய்முறை


ஓர் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு, பிரியாணி இலை, பெருஞ்சீரகம் போட்டு வெடித்ததும்,


வெட்டி வைத்த வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும்


வெட்டி வைத்த தக்காளிப்பழம்


இஞ்சி, பூண்டு விழுதுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின்பு,


கோழிக்கறியைச் சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் வேகவிட வேண்டும். கறி இலேசாக தண்ணீர் விட ஆரம்பிக்கும் போது


தூள்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு அதனுடன்


குருமாவிற்குத் தேவையான அளவு தண்ணீர்  சேர்த்து மூடி  வேகவிட வேண்டும்.


குழம்பு  நன்கு கொதித்துக் கறி பாதி அளவு வெந்ததும் வெட்டி வைத்த உருளைக்கிழங்கு அல்லது முருங்கைக்காய் துண்டுகள் சேர்த்துக் கொதிக்க விடவேண்டும்.


கறி, உருளைக்கிழங்கு நன்கு வெந்து குழம்பு கட்டியானதும் ஒரு மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து, கொஞ்சம் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கி விட வேண்டும்.


சுவையான கோழிக்கறி குழம்பு தயார்.

குழம்பு கொதிக்கும் போது தேங்காய்ப் பால் சேர்த்து, கொஞ்சம் கசக்கசா முந்திரிப்பயிர் சேர்த்து அரைத்து ஊற்றிக் கொதிக்க வைத்து இறக்கினால் அதன் பெயர் ‘‘கோழிக்கறி குருமா‘‘

       குழம்பு, கொஞ்சம் காரம்சாரமாக இருக்கும். குருமாவில் தேங்காய்ப்பால் முந்திரி கசக்கசா சேர்ப்பதால் கட்டியாக மேலும் சுவையாக இருக்கும்.

நன்றியுடன்
அருணா செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக