செவ்வாய், 14 ஜூன், 2022

நெய்தல் மலர்! (வெள்ளாம்பல்)

 


நெய்தல் மலர்உவர் நீரில் மலர்ந்திடும்!
தெய்வத்தின் மேல்சாற்றார்! தேனெடுக்க _ மொய்த்திடும்
வண்டு மதிமயங்கும்! வைகறையில் பூக்குமிதன்
தண்டுமிகக் குட்டையான தாம்!
.
பாவலர் அருணா செல்வம்
14.06.2022

 
(குறிஞ்சிப்பாட்டில் இரண்டு நெய்தல் மலர்கள் உள்ளன.
நீள்நறு நெய்தல் என்பது நீலாம்பல்
மணிக்குலைக் கள்கமழ் நெய்தல் என்பது வெள்ளாம்பல்)
 
(நெய்தல் நிலப் பூக்களாக அடும்பு, புன்னை, ஞாழல், கோங்கு, தாழை, தும்பை, நெய்தல் ஆகும்)
 
(ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்ற பெயர்களைக் கொண்ட நீர் மலர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவையாகும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக