செவ்வாய், 7 ஜூன், 2022

தோன்றி மலர்! (இருநிறக் காந்தள்)


 


.
சீர்ச்சுடர்போல் தோன்றிச் சிறப்புறும் தோன்றிமலர்
கார்காலம் வந்திடக் காத்திருக்கும்  வேர்மண்ணில்!
செவ்விதழ்கள் மேல்நோக்கச் சேவலின் கொண்டைபோல்
கவ்விடும் நெஞ்சைக் கவர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
07.06.2022

 

(காந்தள் என்பது செங்காந்தள்

கோடல் என்பது வெண்காந்தள்

தோன்றி என்பது இருநிறமும் கொண்ட காந்தள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக