திங்கள், 18 ஜனவரி, 2021

திண்ணை வீடு!

 


.

மனம்படைத்த மாந்தரெல்லாம் அமைத்த வீடு
…………மற்றவர்க்கும் உதவிடவே கட்டி வைத்தார்!
இனம்செழிக்க வேண்டுமென்றே நெஞ்சம் கொண்டே
…………இருபக்கத் திண்ணைவைத்தே உதவி செய்தார்!
தினம்நடக்கும் நிகழ்ச்சியாவும் ஓய்வு கொள்வோர்
…………திரைக்காட்சி போல்சொல்லி மகிழ்ந்து போவார்!
கனம்நெஞ்சில் இல்லையன்று ! திண்ணை வீட்டைக்
…………காட்டுகின்ற ஒற்றுமையின் உயர்வாய்க் கொள்வோம்!
.
பாவலர் அருணா செல்வம்
18.01.2021

1 கருத்து: