திங்கள், 14 செப்டம்பர், 2020

செந்தமிழே வருக!

 


செந்தமிழே வருக!
-
(எடுப்பு)
செந்தமிழே வருக! – நாளும்
சிந்தையிலே அமர்ந்து
சொந்தமெனச் சொல்க!
-

(தொடுப்பு)
எந்தமிழே வருக! – எழுதும்
சந்தமதில் அமர்ந்து
விந்தையெலாம் தருக!
-
(முடிப்பு)
தோன்றிய காலமுன்தன் தொடக்கமும் தெரியவில்லை
தொடர்ந்திடும் உன்பெயரை மறக்கவும் முடியவில்லை
மூன்று காலமதில் மூத்தவளாய் இருந்து (2)
முன்னைத் தெய்வமென மூச்சினிலே கலந்த….. 
                           (செந்தமிழே வருக!)
-
கன்னித் தமிழென்று கவிஞர்கள் கவிபடைத்தார்!
கனிந்தநற் சுவையென்று கனித்தமிழ் எனவுரைத்தார்
பொன்னின் மேலேனப் புகழெலாம் கொண்டு (2)
பொலிந்திடும் அழகாய்ப் புதுமைகள் புணைந்த….
                       (எந்தமிழே வருக!)
-
துள்ளும் ஓசையுடன் சுவையெனக் கலந்திருந்தாய்
துாங்க லிசையாகத் தொடையுடன் நடந்திருந்தாய்!
அள்ளும் செப்பலிலும் அழகுடனே நிறைந்து (2)
ஆனந்தம் பொங்கிட அணியெலாம் அணிந்த-----
            (செந்தமிழே வருக!)                        
-
எந்தம் இதயத்தில் இன்னொளி ஏற்றிவைத்தாய்
இயற்றும் பாடலிலே இறையென நிறைந்திருந்தாய்!
சிந்து வண்ணமெனச் சீர்க்கவிகள் தந்து (2)
சிந்தையில் அமர்ந்த செழித்தயெம் உயிரே……
                  (எந்தமிழே வருக!)
- 
பாவலர் அருணா செல்வம்                          

3 கருத்துகள்:

  1. வலைப்பூ திறந்தவுடன் வேறு பக்கத்திற்கு செல்கிறது... கவனிக்கவும்... தேவையில்லாத சில gadgets நீக்கவும்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் தனபாலன் அண்ணா. எப்படி நீக்க வேண்டும். தயவுசெய்து தெரிவியுங்கள். நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு