சனி, 22 டிசம்பர், 2018

சமுச்சய உவமை! - 4




    பாடலில், ஒரு பொருளை இன்னொரு பொருளோடு ஒப்புமை கூறும் போது, அந்தப் பொருள் இதனோடு மட்டுமின்றி மற்றொன்றாலும் ஒக்கும் என்று சொல்வதுசமுச்சய உவமை அணிஆகும். சுறுக்கமாக, இதனை ஒப்பது இதனோடு இன்றி இதனாலும் ஒக்கும் என்பதாம்.
    இவ்வணி இரண்டு மூன்று ஒப்புதலைக் கூட்டிச் சொல்ல வரும். அதாவது ஒரு பொருளோடு ஒருபொருள் உவமிக்கப்படும் போது, இந்த காரணம் மட்டும் இன்றி இன்னும் இரண்டு மூன்று காரணங்களாலும் உவமை படுவதைக் கூட்டிச் சொல்வது ஆகும்.

வளைவுக்கே ஒப்பாக வந்ததன்றி, மேனி
இளைத்தலும், மென்பூ இதழும்! – கிளைவள
காய்கனியும், வாழ்வின் கருசூழ் இடமொக்கும்
நோய்த்தல் கொடியிடை நோக்கு!

பொருள் பெண்ணின் இடையானது வளைவதனால் மட்டும் கொடியிடை என்று ஒப்பாக சொல்வதன்றி, மேனி இளைத்தலை ஒப்பதும், மென்மையான மலரிதழை ஒப்பதும், வளமான கிளைகளில் உள்ள காய்கனிகளை ஒப்பதும், மகரந்தம் சூழும் இடத்தை ஒப்பதாலும் பெண்ணின் கொடியிடை ஒக்கும் என்பதனால் இந்த உவமைசமுச்சயம் உவமைஆகியது.
(நோய்த்தல்மெலிதல்)
.
பாவலர் அருணா செல்வம்
22.12.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக