வியாழன், 27 டிசம்பர், 2018

மறுபொருள் உவமை! - 6




     பாடலில் முதலில் ஒருபொருளுக்கு ஒரு பொருளை உவமையாக வைத்துக் கூறிய பிறகும், பின்பு அதற்கு நிகரான மற்றொரு பொருளை மீண்டும் உவமையாக கூறி முதலில் உள்ள பொருளுக்கு இதை உவமையாக வைப்பது  மறுபொருள் உவமைஆகும்.

உ. ம்
காற்றைப்போல் நெஞ்சுள் கமழ்ந்திடும் தாய்மொழியே
ஊற்றைப்போல் உன்னால் உளம்நிறைபோல்! ஏற்று
மகிழும் மறைபோல், மறையாமல் வாழும்
அகிலத்தில் அன்னையின் அன்பு!

பொருள்காற்றைப்போல் நெஞ்சுக்குள் என்றும் நிறைந்து இருப்பது தாய்மொழி. அதைப்படிக்க ஊற்றின் குளிர்வினைப் போல் உள்ளம் நிறையும். அதுபோல் உலகத்தில் இருக்கும் மறைந்திடாத திருமறையைப்போல நாம் வாழுமட்டும் அன்னையின் அன்பு நெஞ்சுள் மறையாது நிறைந்திருக்கும்.

    இப்பாடலில் முன்னர் வைத்த பொருள் தாய்மொழி. பின்னர் வைத்த பொருள் அன்பு. நெஞ்சத்துள் காற்றுபோல் தாய்மொழி இருப்பதைப் போல, வாழும் வாழ்வில் தாயின் அன்பு நிறைந்து ஒத்திருக்கும் எனக் கூறி இருப்பதால் இதுமறுபொருள் உவமை அணிஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
27.12.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக