வெள்ளி, 28 செப்டம்பர், 2012

பெண்களுக்கு “முக்காடு“ அவசியமாகிறது..!! (தகவல்)




வணக்கம் நட்புறவுகளே.

     இன்றைய காலத்தில் முஸ்லிம் அல்லாத பெண்களும் முக்காடு போட வேண்டிய அவசியம் வந்துள்ளதையும் கொஞ்ச காலமாக வேறு வழியில்லாமல் முக்காடு போட்டுக்கொண்டு பெண்கள் வெளி வேலைக்குச் செல்வதையும் இங்கே காண நேர்ந்ததை உங்களுக்கும் பகிர்கிறேன்.

    இந்தியாவில் முக்கியமாக தென் திசை பெண்களுக்கு அழகிய கூந்தல் இருப்பது அனைவரும் நாம் அறிந்ததே.
    கோவில்களில் முக்கியமாக திருப்பதி கொவிலில் முடி காணிக்கையாலே இந்தியாவில் அதிக வருமானம் கிடைக்கிறது.
     இந்த ஆண்டு முதன்முறையாக இணையத்தின் மூலம் 150 டன் முடி ஏலம் விடப்பட்டு முதன் முறையாக 133 கோடி கிடைத்தது.
     இந்த முடியை அமெரிக்கா, சீனா, ஆப்பிரிக்காவில் நைஜிரியா போன்ற முக்கிய நாடுகள் நான் முந்தி நீ முந்தி என்று ஏலம் எடுத்து வாங்குகிறது. நம் பெண்களின் அழகிய முடிக்கு அவ்வளவு கிராக்கி!!
     இதெல்லாம் பழைய கதைதான்.!!

   ஆனால் இப்பொழுது நடக்கும் கதை தான் கவலைக்குரியதாக இருக்கிறது. இங்கே பிரான்சில் பெண்களின் தாலி சரடைப் பிடுங்குவதால் பெண்கள் கொஞ்ச காலமாக மஞ்சள் கயிற்றில் வெறும் தாலியை மட்டும் இணைத்து அணிந்து கொண்டு வெளியிடங்களுக்கச் சென்றார்கள்.
    இந்த மஞ்சள் கயிற்றில் இருக்கும் மாங்கல்யத்தில் இருக்கும் சிறு தங்கத்திற்காக அந்தக் கயிற்றையும் அறுத்தார்கள் திருடர்கள்.. அதனால் பயமடைந்த நிறைய பெண்கள் தாலி சரடோ, மஞ்சள் கயிறோ கழுத்தில் அணியாமல் அந்த மஞ்சள் கயிற்றைக் கையில் நோம்பு கயிறு போல் கட்டிக் கொள்கிறார்கள். (இங்கே பெரியார் வந்தெல்லாம் பகுத்தறிவை ஊட்டவில்லை. வெறும் கள்ளர் பயத்தால்...)
    இதுவாவது பரவாயில்லை என்று தான் நினைத்தோம்.
    இப்பொழுது நடப்பது என்னவென்றால் அழகிய கூந்தல் உள்ள பெண்களின் கூந்தலை பஸ்ஸிலோ.. மெத்ரோவிலோ... அல்லது நடந்து போகும் போதோ அவர்களுக்குத் தெரியாமலோ அல்லது மிரட்டியோ வெட்டிக் செல்கிறார்கள்.
   இது இங்கே புதியதாகத் துவங்கியிருக்கும் திருட்டு!!!
   அதற்காகவே கடந்த ஒரு மாதமாக வெளிவேலைக்குச் செல்லும் கூந்தலுடையப் பெண்கள் முக்காடிட்டுச் செல்கிறார்கள்.
என்ன கொடுமை இது. எப்பொழுது இந்த வழக்கம் மாறும் என்றும் தெரியவில்லை.

நன்றி.


அருணாசெல்வம்.

34 கருத்துகள்:

  1. தகவல்களுக்கு நன்றி...

    முடிவில் படம் யம்மாடி....!!! உண்மையா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தனபாலன் ஐயா.

      படம் இணையத்தில் பார்த்ததும் வியந்து நம்மவர்களுக்கும் காட்டலாம் என்று தான் எடுத்தேன் (சுட்டேன்).

      நீக்கு
  2. அழகின் ஆபத்து முகத்தில் ஆரம்பித்து முடிவரைக்கும் வந்துவிட்டது :(வயிறு பத்தி எரிகிறது .பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வலுப்பெற்றுக் கொண்டேதான் செல்கிறதுஒளிய அவை கடுகளவும் குறைவாதாகத் தெரியவில்லை .மனதை உறைய வைத்த பகிர்வு .மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்கள் எவ்வளவு தான் முன்னேறி வந்தாலும் இப்படிப்பட்ட கொடுதைகளுக்கும் பயந்து தான் ஆகவேண்டி இருக்கிறது அம்பாளடியாள்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி .

      நீக்கு
  3. பதில்கள்
    1. அதை ஏங்க கேக்குறீங்க...
      இன்னும் என்ன என்னவோ நடக்குதுங்க...

      நன்றி நண்பரே.

      நீக்கு

  4. இதுவென்ன கொடுமை! கால்துறை என்ன செய்கிறது...?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்..
      காவல் துறை இந்த விசயத்தில் காந்தாரி கண்களாக இருக்கிறது.

      நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  5. அந்நாட்டு அரசிடம் நம் தூதர் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.(அப்போது மட்டும் என்ன நடந்து விடப்போகிறது?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் வீட்டில் நடந்தால் தான் ஆக்ஸன் எடுப்பார் என்று நினைக்கிறேன்.

      நன்றி குட்டன்.

      நீக்கு
  6. "கள்ளர் பயத்தால் கையில் கட்டிக்கொண்டேன் தாலியை
    திருடர் பயத்தால் வீட்டினுள் வைத்து விட்டேன் சவுரியை"

    என்று கவிதை எழுதாமற்போனீர்களே..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஐடியா தான் உதயன் ஐயா.

      ஆனால் எனக்கு சவரி வைக்க வேண்டிய அவசியம் இல்லாததால் அந்த ஞாபகம் வரவில்லை என்று நினைக்கிறேன்.

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி உதயன் ஐயா.

      நீக்கு
  7. திருடர்கள் திருந்தாதவரை திருட்டை ஒழிக்க முடியாது..:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது சிட்டுக்குருவி....
      திருடர்கள் புத்திசாளியாக இருக்கிறார்களே...

      நன்றி சிட்டு.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும்
      ....!!! கருத்திற்கும் நன்றி சுகுமார் ஐயா.

      நீக்கு
  9. எமது
    கமன்டை......எதுக்கும்
    அங்க
    ஒரு
    எட்டு
    பாருங்களேன்

    பதிலளிநீக்கு
  10. பிரான்ஸ் போலிஸ் நல்ல போலிஸ் ஆச்சே.. பாத்துகிட்டு சும்மாவா இருக்கு?

    இந்த பொன்னுங்களுக்குத்தான் எத்தனை சோதனை :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரான்சு போலிஸர் நல்லவர்கள் தான்.
      அதனால் தான் திருடர்களைக் காப்பாத்துகிறார்கள் என்று நினைக்கிறேன் வசு.

      பாவம் தான் பெண்கள். (ஆனாலும் குட்டையாக முடியிருந்தால் அதிலேயும் அழகாகத் தான் தெரிகிறார்கள்!!!)

      நீக்கு
  11. எப்படியெல்லாம் பயந்து வாழவேண்டியுள்ளது? இதுவரை கேள்விப்படாத புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி அருணாசெல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க கீதமஞ்சரி அக்கா...

      இது இங்கே எங்களுக்கும் புதிய தகவல் தான்.

      நன்றி அக்கா.

      நீக்கு
  12. பதில்கள்
    1. ஆச்சர்யப் படாதீர்கள் முரளிதரன் ஐயா.
      இங்கே தான் அதிகமாகத் திருட்டு நடக்கிறது என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச நாட்கள் போலிஸ் கண்டுக்கொள்ளாமல் போனால் இந்த விசயத்தில் இவர்கள் முன்னுக்கு வந்துவிடுவார்கள்.

      ஆனால் நம்மவர்களிடமும் சில சிக்கல் பிரட்சனைகள் வருவதால் பறி கொடுத்தவர்கள் போலிஸில் சொல்லாமல் வாய் மூடியும் இருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விசயம்.
      நன்றி ஐயா.

      நீக்கு
  13. என்ன கொடுமை இது ..
    ஒன்னும் சொல்றதுக்கில்ல போலிருக்கே ,...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே... வாயடைத்துப் போய் எதுவும் செய்யமுடியாமல் பறி கொடுத்தவர்கள் விழிக்கிறார்கள.

      நன்றி நண்பரே.

      நீக்கு
  14. பிரான்ஸிலா......ஆச்சரியமாயிருக்கே அருணா.கார்களை உடைத்து தேவையான சாமன்கள் திருவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் இப்படி களவுகள் எபோதாவதுதானே.இதைப் பார்க்கையில் சுவிஸ் சூப்பர் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் பிரான்சைச் சூப்பர் என்று தான் இரண்டு வருடத்திற்கு முன்பு வரை சொல்லிக்கொண்டு வந்தோம்....
      ஆனால் இன்று....?

      கருத்திற்கு நன்றி என் இனிய தோழி ஹேமா.

      நீக்கு
  15. கொடிகட்டி பரந்த நாட்டில் முடிக்கு திருடா ?ஓர் வேலை இந்தியர் முடிக்குஈடு இணையில்லா மதிப்பு வந்துவிட்டதா ?
    உங்கள் பதிவு மிக அருமை.நன்றி வணக்கம் நண்பா ..

    அன்புடன் கருப்பசாமி

    பதிலளிநீக்கு
  16. என்ன என்னவெல்லாமோ நடக்கிறது.
    உலகமே ரெம்ப மோசமாகப் போகிறது.
    சோகம் தான் நல்ல பதிவு. நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு