திங்கள், 30 ஜனவரி, 2023

தழுவாத கைகள்!

 


பெற்றோர்கள் கண்தழுவும் பிள்ளை மீதே!
       பெண்டீர்கள் மனம்தழுவும் கணவன் மீதே!
கற்றவர்கள் உளம்தழுவும் கல்வி மீதே!
       காதலனோ நிதம்தழுவான் நினைவி னாலே!
பற்றெல்லாம் விட்டவர்கள் நோக்கம் எல்லாம்
       பரந்தாமன் கால்தழுவ வேண்டும் என்றே!
சுற்றமற்றுச் சுயநலமாய் வாழ்வோர்க் குண்டே
      சுமையாக நீண்டதழு வாத கைகள்!
.
பாவலர்  அருணா செல்வம்
31.01.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக