புதன், 1 பிப்ரவரி, 2023

இமைக்குள்ளே நீ!

 


உமையாளை இடம்வைத்த ஈசன் உள்ளம்
   உயர்வுணர்த்தும் பெண்ணினத்தின் மேன்மை சொல்லும் !
எமைக்காக்கும் கடவுளைப்போல் காதல் கொண்டே
   என்னவளை என்கண்ணில் வைத்தேன் நன்றே!
சுமையென்றே வாழ்வினையே நினைத்தேன்! அன்பு
   சுந்தரியுன் காதலினால் வசந்தம் கண்டேன்!
இமைக்குள்ளே நீயிருந்து நடத்து கின்றாய்
   இனியாவும் நலமாகும் என்றன் வாழ்வில்!
.
பாவலர் அருணா செல்வம்
02.02.2013

1 கருத்து: