புதன், 20 ஜூலை, 2022

ஏனிப்படி ஆனாள் ?

 


ஆனிப்பொன் தேர்போல் அசையுங் கொடியிடை!
தேனிக்கள் மொய்த்திடும் தேனரும்பும் பூவிதழ்!
வானிருக்கும் மீன்போல வண்ணமிடுங் கண்ணுடையாள்!
ஏனிப் படியானாள்? என்றுரைப்பாய் தோழியே!
.
பாவலர் அருணா செல்வம்
20.07.2022

(வெண்டளையால் அமைந்த கலிவிருத்தம்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக