வியாழன், 27 ஆகஸ்ட், 2020

தேவியின் மனவழகு!

 


(சிந்துப்பா).

அன்புடன் பார்த்து நின்றாள்அதில்
ஆசையைக் கோர்த்தி ருந்தாள்!
பொன்னுடல் வேர்த்தி ருந்தாள்அதில்
போதையைச் சேர்த்தி ருந்தாள்!
 
சிலைபோல் சிரித்து நின்றாள்தமிழால்
சிந்தையை உறைய வைத்தாள்!
கலைபோல் செழித்து நின்றாள்அமிழ்தாய்
கற்பனை சுரக்க வைத்தாள்!
 
மலரோ அவளி தழ்தான்மிஞ்சும்
மதுவோ ததும்பி டுந்தேன்!
நிலவோ அவள் முகந்தான்நெஞ்சின்
நிலையோ அவளி டந்தான்!
 
சேலையில் பூத்தி ருந்தாள்எந்தன்
சிந்தையை ஈர்த்து விட்டாள்!
காளைநான் காத்தி ருந்தேன்வந்து
கவலையைப் போக்கி டுவாள்!
 
தேவியின் மன வழகுவீரத்
தீந்தமிழ் மொழி யழகு!
கூவிடும் மன முழவுசேரக்
கொட்டிடும் கவிப் பொழிவு!
.
பாவலர் அருணா செல்வம்
28.08.2020

1 கருத்து: