செவ்வாய், 24 டிசம்பர், 2019

அரசின் கனவு!



.
எத்தனை சாதிகள் இருந்தாலும்
    …..எத்தனை பேதமும் இருந்தாலும்
பித்தென அவைகளைப் பிடித்தாலும்
    …..பிழையென அவைகளை விட்டாலும்,
இத்தரை மீதினில் பிறந்ததினால்
    …..இணையென ஒன்றிய உறவுகளை
முத்திரை ஆணைகள் விட்டதனை
    …..முடித்திட முயல்வது வெறுங்கனவே!
.
பாவலர் அருணா செல்வம்
24.12.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக