திங்கள், 6 மே, 2019

முன்ன விலக்கு அணி - எதிர்வினை விலக்கு!



எதிர்வினை விலக்கு!
பாடலில் எதிர்காலத்தில் நிகழப்போகும் நிகழ்ச்சியை விலக்குவது எதிர்வினை விலக்குஎனப்படும்.

. ம்
காற்றடிக்கும் வானத்தில் கார்மேகம் மோதமழைக்
கீற்றை நனைத்திடக் கீழிறங்கும்! – சோற்றினைக்
கூழாக்கி வற்றலிட்டால் கூடி உழைத்ததெல்லாம்
பாழாகும் என்றாள் பயந்து!

பொருள் காற்று அடிக்கும். வானத்தில் கார்மேகங்கள் மோதிட மழைப் பொழியும். அதனால் வீட்டில் வெய்த கீற்றுகள் நனைந்து மழைநீர் கீழறங்கும். சோற்றைக் கொண்டு கூழ்போன்று செய்து தரையில் வற்றல் இட்டால் நாம் கூடி உழைத்துச் செய்ததெல்லாம் பாழாய்ப் போய்விடுமென்று. பயமாக இருப்பதால் வற்றல் காய வைக்க வேண்டாம் என்றாள்.

பாடலில் எதிர்காலத்தில் வரப்போகும் மழைக்குப் பயந்து இப்போதைய செயலைச் செய்யாமல் விலக்கியதால் இது எதிர்வினை விலக்குஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
06.05.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக