செவ்வாய், 14 அக்டோபர், 2014

நானே உன்னை அழித்திடுவேன்!!




நானே வேண்டாம் என்றாலும்
    நயமாய் என்னுள் புகுந்துவிட்டாய்!
வீணே வந்த உன்வரவால்
    வேலை செய்யத் தோன்றாமல்
தேனாய் இருந்த வாய்கசக்க
    தேகம் சூட்டில் கொதித்திருக்க
கூனாய்ச் சுருள மனம்விரும்பி
    கொடுத்த வாக்கை செயத்தடுத்தாய்!

நோயே என்னுள் ஏன்வந்தாய்?
   நொந்து போவேன் எனநினைத்தா?
பாயே படுக்க அழைத்தாலும்
   பணியைச் செய்யத் தடுத்தாலும்
தீயே! உன்னை மதிக்கமாட்டேன்!
   திரும்பி உடனே போய்விடு!
நீயாய்ப் போகா விட்டாலும்
   நானே உன்னை அழித்திடுவேன்!

 அருணா செல்வம்
14.10.2014

39 கருத்துகள்:

  1. அருமை சகோதரியாரே
    நோயால் என்ன செய்ய முடியும்

    பதிலளிநீக்கு
  2. சும்மா கவிதைக்காகவா... உடல்நிலை உங்களுக்கே சரியில்லையா...

    ஆயின், சீக்கிரம் குணமடைய பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே உடல் நிலை சரியில்லை. ஆனால் எல்லோருக்கும் வருவது தான். தலைவலி, காய்ச்சய், ஜலதோஷம்.....

      நீங்கள் உடனடியாக நலம் விசாரித்தது மனதுக்கு மிகவும் மகிழ்வைக் கொடுத்தது.
      நானும் இந்த வலையுலகத்தில் நல்ல நட்புகளைச் சேர்த்திருக்கிறேன் என்ற திருப்தியும்.

      நீக்கு
  3. அருணா விரைவில் நலம் பெறுவீர்கள்.

    கவிதை நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. சீக்கிரம் அழித்துவிட்டு
    வந்து
    கவிதைகளை தாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சிக்கிறேன்.
      நம்ம உடல் காலி பெருங்காய டப்பா மாதிரின்னு சொல்லுவாங்க. உண்மை தான் போல.

      நன்றி மது ஐயா.

      நீக்கு
  5. இடும்பைக்கே இடும்பை படுத்தலோ கவிஞரே...?!!!
    அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயந்து கொண்டே இருப்பதை விட ஒரு முறை துணிந்து
      மோதி பார்த்துவிடுவது நல்லது தானே கவிஞரே.
      வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  6. கவிதை அழகு! ஆனால் தங்கள் உடல் நிலை குறித்த கவிதை என்றால் ....வருத்தம். உங்கள் உடல் நிலை சீக்கிரம் குணமடைய எங்கள் பிரார்த்தனை. சீக்கிரம் குணம் அடைந்தால்தான் நீங்கள் இன்னும் எழுதுவீர்கள் எங்களுக்கும் கவிதைகள் கிடைக்கும்....சுயநலம்தான்...!!??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொது நலத்தைச் சுயநலமாகக் காண்பதும் உயர்ந்தது தானே ஐயா...

      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  7. உன்னை அழித்துவிடுவேன் என்ற தலைப்பை பார்த்ததும் உள்ளே வர சற்று பயமாக இருந்தது. ஒரு வேளை இது என்னை மிரட்ட போட்ட பதிவோ என்று எண்ணிபயந்து போனேன். இருந்தாலும் என் மனைவியை பக்கத்தில் உட்கார வைத்துவிட்டு கவிதையை படித்தேன் அருமையாக இருந்தது இதை படிக்கவா பயந்தாய் என்று என் தலையில் பூரிக்கட்டையால் அடித்து சென்றாள், ஹும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன்னை அழித்துவிடுவேன் என்ற தலைப்பை பார்த்ததும் உள்ளே வர சற்று பயமாக இருந்தது....

      அந்த பயம் இருக்கட்டும்.

      ஒரு வேளை இது என்னை மிரட்ட போட்ட பதிவோ என்று எண்ணிபயந்து போனேன்.....
      மிரட்டுவதற்க்கெல்லாம் பதிவு போட மாட்டேன். டைரெக்டா செயல் தான்...

      இருந்தாலும் என் மனைவியை பக்கத்தில் உட்கார வைத்துவிட்டு கவிதையை படித்தேன்....

      படித்ததால் விட்டுவிடுகிறேன்.

      அருமையாக இருந்தது....

      இதைமட்டும் சொல்லி இல்லையென்றால்.... விட்டிருக்க மாட்டேன்.

      இதை படிக்கவா பயந்தாய் என்று என் தலையில் பூரிக்கட்டையால் அடித்து சென்றாள், ஹும்....

      பாவம் மாமிக்கு கைதான் வலித்திருக்கும். என்னால் அவர்களுக்கு தான் கஷ்டம்....(

      நீக்கு
  8. என்ன உண்மையில் உடம்பு சரியில்லையா அல்லது உங்கள் காதல் கணவர் வேலை விஷயமாக டூர் சென்றதால் அதாவது பிரிவின் காரணமாக அல்லது ஏக்கத்தின் காரணமாக நோய்வாய்பட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் காதல் கணவர் டூர் போனாலும் என்னையும் அழைத்துக்கொண்டே தான் போவார்...

      நீக்கு
  9. உடம்பு சரியில்லைன்னா பேசாம ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே நீங்கள் ரெஸ்ட எடுத்தால் நாங்களும் உங்கள் கவிதைகளை படிப்பதில் இருந்து ரெஸ்ட் எடுத்த மாதிரி இருக்குமே.. என்னடா இவங்க எப்படி நிம்மதியாக இருப்பது என்று நினைத்து எழுதிய மாதிரி இருக்கு....ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை அவ்வளவு நிம்மதியாக இருக்க விட மாட்டேங்கோ.

      நீக்கு
  10. வணக்கம் !
    என் அருமைத் தோழியே விரைவில் தங்களின் உடல் குணமடையப்
    பிரார்த்திக்கின்றேன் !சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் .இறைவன்
    அருளால் எல்லாம் நல்லபடி யே நடக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அவசிய அக்கரைக்கும்
      என் மனமார்ந்த நன்றி தோழி.

      நீக்கு
  11. வணக்கம் தோழி!

    தேயாது நன்நலம் தேர்ந்துடன் காத்திடுக!
    ஓயா தலைதல் ஒறுத்து!

    நலனைக் கவனியுங்கள்!
    கம்பன் விழாவும் நெருங்குகிறதே!

    அருமையான விருத்தம்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தோழி.
      கம்பன் விழா சிறப்புடன் நடந்தது.
      உடல்நிலை சரியில்லை தான். என்றாலும் நம் விழா இல்லையா? சோர்வாக இருந்தாலும் கலந்து கொண்டேன்.

      தங்களின் அன்பான விசாரிப்புக்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  12. கவிதை தன்னம்பிக்கை தந்தது..

    விரைவில் உடல் நலம் பெற எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  13. உடல் நல சீர்குலைவு ஏற்படும் போது பயப்படாமல் எதிர் கொள்ள வேண்டும் என்று அன்னை சொன்னது போல் (அரவிந்தர் அன்னை)

    நோயை எதிர்த்து கவிதை பாடி விட்டீர்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னது சரிதான் அம்மா.
      கூடவே தன்னம்பிக்கையும் காரணம் தான் அம்மா.

      இருந்தாலும் ஓய்வு தேவைப்படுகிறது.
      நன்றி அம்மா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. என்னங்கையா செய்வது?

      என் உள்ளத்தின் கருத்தைச்சொல்ல முயன்றேன். அதுவும் கவிதையாகி விடுகிறது.

      நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  15. மனிதனின் மனோ வலிமைக்கு எல்லை கிடையாது !

    " உண்டு என்றால் அது உண்டு... இல்லையென்றால் அது இல்லை ! "

    என்ற வரிகளின்படி கற்பனைகளின் மூலமே ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தது மனம் !

    அந்த மனோ வலிமையை மிக அழகான கவிதையாக கொடுத்துள்ளீர்கள். விரும்பி வாசித்தேன் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : தேங்காய்க்குள்ள பாம் !

    http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post_15.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சாமானியன் ஐயா.

      “கற்பனைகளின் மூலமே ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தது மனம்“ என்று எழுதி இருக்கிறீர்கள்.
      ஏதோ என்னை யோசிக்கத் துர்ண்டுகிறது.

      தங்களின் பதிவை அவசியம் படிக்கிறேன்.
      நன்றி ஐயா.

      நீக்கு
  16. கருத்து சொல்ல வரவில்லை
    கற்கண்டு தரும் சுவைமிகு வாழ்த்து
    சொல்லவே யாம் வந்தோம் யாதவன் நம்பியாக!

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
    அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வேலு ஐயா.
      உங்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      நீக்கு
  17. என்ன மேடம் உடல் நலம் சரியாகிவிட்டதா? நலமாக பிரார்த்தனைகள்...இந்த பிரார்த்தனைகள் உங்களுக்காக அல்ல எனக்காத்தான் அதாவது நீங்க்ள் குணமாகி வந்தால்தான் பதிவு போட முடியும் பதிவிட்டால்தான் நான் கலாய்க்க முடியும் கலாய்த்தால்தானே நான் பூரிக்கட்டையால் வாங்கும் அடியின் வலி மறையும் ஹும் அதனால்தான் சொல்லுறேன் சீக்கிரம் வாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா..... என் பதிவு நீங்கள் வாங்கும் அடியையும் மறக்கடிக்கச் செய்கிறதா.....? இது எவ்வளவு பெரிய வரம் தெரியுமா எனக்கு...... நன்றி நன்றி.

      தங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றி “உண்மைகள்“
      உடல் நலம் சற்று தேறி வருகிறது. இன்னும் கொஞ்சம் ஓய்வு தேவை. கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.
      நன்றி “உண்மைகள்“


      நீக்கு
  18. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் லேட்டாகத் தாங்க தீபாவளி வாழ்த்து சொல்கிறேன்.

      நன்றி தமிழரே.

      நீக்கு
  19. உடல் நலம் பெறவும் தீபாவளியை முன்னிட்டும் தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் தோழி.

      மிக்க நன்றி.

      நீக்கு