வியாழன், 28 ஜனவரி, 2016

கணவாய் மீன் வறுவல்!


கணவாய் மீன் வறுவல்

தேவையான பொருட்கள்

கணவாய் மீன்   - 1 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
புண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
நெல் சீரகத் துர்ள் - 2 தே க
எண்ணை 
கடுகு உளுத்தம் பயிர்
கருவேப்பிள்ளை கொத்துமல்லி தழை.

(காரம், தொக்கு அதிகமாக வேண்டுமென்றால்  மேற்கொண்டு சேர்த்தக் கொள்ளங்கள்.)



முட்டை கணவா மீன்


நன்றாக ஆய்ந்து கழுவி எடுத்தக்கொள்ளுங்கள்.



ஒரு வாணலில் தலைகளை மட்டும் எடுத்து இரண்டாக வெட்டி (அப்படியே கூட போடலாம். எனக்கு பார்க்க பயமாக இருப்பதால் இப்படி இரண்டாக வெட்டிவிடுவேன்.... ) அதனுடன் கொஞ்சம் உப்பு கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விடாமல் அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேக விட வேண்டும். 
      கனவா தலைகள் வேகும் போதே அதிகமாக நீரை வெளியிடும். இந்த நீரை வடிகட்டி கீழே கொட்டிவிட வேண்டும். இப்படிக் கொட்டிவிடுவதால் கானவா மீனின் கவுச்சி வாடை கிட்டத்தட்ட முற்றிலுமாக போய்விடும்.
      பிறகு இதைத் தனியே எடுத்து வைத்துவிடுங்கள்.


வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை வெட்டி.... பின்பு


வாணலியை அடுப்பிலேற்றி காய்ந்ததும் எண்ணை விட்டு கடுகு உளுத்தம் பயிரு போட்டுத் தாளித்துப்.... பின்பு


வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி... பின்பு


தக்காளி, பூண்டு விழுது, கறிவேப்பிள்ளை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து....


நன்றாக வதக்கியப் பின்பு...


அதில் கனவாய் மீன், ஏற்கனவே வேகவைத்த கனவா மீன் தலை, மிளகாய்த்துாள், நெல் சீரகப்பொடி, சேர்த்து....


நன்றாகக் கிளறி மூடி வேகவிட வேண்டும். இந்த நேரத்தில் ருசி பார்த்து காரம் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
அடிக்கடி அடிபிடிக்காமல் கிளறிவிட வேண்டும்.


நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் கொத்துமல்லி தழையைக் கிள்ளி போட்டு இறக்கி விட வேண்டும்.


கணவாய் மீன் வறுவல் ரெடி!

இதுவே கணவாய் மீன் வறுவல் செய்முறை. இதை சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம்.
(மற்றபடி நல்ல சுவையான சைடிஷ்)
         நான் ஏன் இவ்வளவு விளக்கமாகச் சொன்னேன் என்றால்...... எனக்கு யாரும் இவ்வளவு விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கவில்லை. .....(

நட்புடன்
அருணா செல்வம்.

10 கருத்துகள்:

  1. புண்டு - பூண்டுதானே அக்கா...
    கணவாய் இங்கு செய்து சாப்பிட்டிருக்கிறேன்...
    இந்த முறையில் செய்து பார்க்கணும்..

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் பழப்புளிக் கரைசல் சேர்ப்பதில்லையா? ஈழத்தில் கடலுணவு பழப்புளியின்றிச் சமைப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      நான் கற்றுக் கொண்டதை எழுதினேன்.
      புளி சேர்த்து செய்ததில்லை.
      எப்படி என்ற சின்ன விளக்கம் கொடுத்தீர்கள் என்றால் கற்றுக் கொள்வேன்.
      நன்றி

      நீக்கு
  3. பதில்கள்
    1. பார்க்க மட்டும்தான் பயம் அண்ணா.
      நிச்சயமாக சாப்பிட பயப்படுவதில்லை.

      நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  4. என்னம்மா கவிதை எழுதுவதை விட்டு கணவாய் மீனுக்குப் போயிட்டே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் புலவர் ஐயா.

      சற்று உடல்நிலை சரியில்லை. கவிதையிலோ எழுதுவதிலோ மனம் லயிக்கவில்லை.
      ஆனால் ஏதாவது வலையில் பதிக்க வேண்டும் என்று ஆசை.
      அதனால் இப்படி உபயோகப்படுத்துகிறேன்.
      இதுவு‌ம் மகிழ்ச்சியாக தான் இருக்கிறது.

      நன்றி புலவர் ஐயா.

      நீக்கு