வெள்ளி, 2 ஜூன், 2023

குறில் அகவல் ஏந்திசை வண்ணம்.

 

 
.
நம்புகின்ற வழியேது ?
.
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தனதான (ஒரு கலைக்கு)
.
அன்பு மென்ப தின்பந் தந்த
    அங்க மென்று முயர்வாகும்!
  அன்று மின்றுங் கொஞ்சும் மென்கை
    அந்தம் மிஞ்சு மமிர்தாகும்!
 
இன்ப மொன்றை என்று முந்த
    எங்கு முன்ற னுருவாகும்!
  இன்றி யெங்கும் துன்ப மொன்ற
    எந்தை எங்கென் றுனைநாடும் !
 
நன்றை யன்றி வஞ்ச நெஞ்சு
    நண்ப னன்பை அறியாது !
 நம்ப வஞ்சும் நெஞ்சை விஞ்சி
    நம்பு கின்ற வழியேது 
 
துன்ப மென்று கொண்ட தென்றும்
    தொங்கு மிந்த வுயிராகும்!
  சொந்த மென்ற இந்த பந்தம்
    சுந்தர் கந்த னுருவாகும் !
.
பாவலர் அருணா செல்வம்
03.06.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக