வியாழன், 22 அக்டோபர், 2020

ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த குறளடி வஞ்சிப்பா

 


இயற்கை!
.
மலர்தரும்மணம் மகிழ்வினைத்தரும்!
நிலம்தரும்வளம் உயிருறும்வரம்!
வளர்பிறைஎழில் இரவினித்திடும்!
குளம்தரும்குளிர் மனமுவந்திடும்!
கடல்தரும்பொருள் பணம்கொடுத்திடும்!
தடம்தரும்வழி இடம்அடைந்திடும்!
மொழிதரும்இசை புகழொளித்திடும்!
பொழிந்திடும்மழை உலகுயர்த்திடும்!
இங்கு
இயற்கை என்றும் இயல்பாய் இருக்கிறது!
செயற்கை நாளும் செயலை மறைக்கிறது!
இறைவன் எழுதி வைத்தான்
குறையே இல்லை! நிறைவாய் நெஞ்சே!
.
பாவலர் அருணா செல்வம்

1 கருத்து: