திங்கள், 19 அக்டோபர், 2020

தென்றலே ஏன்வந்தாய் செப்பு?

 


ஊடலின்றி அன்புமிகுந்(து) ஊற இருந்தவளைக்
கூடலுடன் கோமகன் கொஞ்சாமல் - வாடவிட்டுப்
பொன்பொருள் கொண்டுவரப் போயிருக்கும் வேளையில்
தென்றலே ஏன்வந்தாய் செப்பு?
.
பாவலர் அருணா செல்வம்
17.10.2020

1 கருத்து: