வெள்ளி, 16 அக்டோபர், 2020

என்னை ஏதோ செய்துவிட்டாள்!

 




.
பட்டப் படிப்பே உயர்வென்று
படிப்பை மட்டும் பார்த்திருந்தேன்!
பட்டித் தொட்டி படம்பார்க்கும்
பாழும் மனத்தை அடக்கிவிட்டேன்!
 
சொட்டுத் தேனாய் வந்துநின்றாள்
சொக்கிப் போயே மாறிவிட்டேன்!
கட்டுக் கடங்கா ஆசையுடன்
கனவு உலகில் மிதக்கின்றேன்!
 
கண்ணுள் புகுந்து கொண்டாளோ
காணும் இடத்தில் தெரிகின்றாள்!
மண்ணில் எதையும் நான்மறக்க
என்னை ஏதோ செய்துவிட்டாள்!
.
 பாவலர் அருணா செல்வம்

1 கருத்து: