சனி, 8 நவம்பர், 2014

ஏமாந்த வண்டு!!


 வண்டு ஒன்று
   பூவோ என்று
      வந்து வட்டமிடச்
செண்டு போன்ற
   இதழால் இமைகள்
      மூடிச் சேர்ந்துவிடக்
கண்ட வண்டு
   குண்டுக் கண்ணைப்
      புதுமைப் பூவெனவே
சென்று மீண்டும்
   கிட்டே வந்து
      திரும்பிச் சென்றிடுதே!!

அருணா செல்வம்.

30 கருத்துகள்:

  1. பாவம் பாவம் வண்டே -மீண்டும்
    பார்த்துத் தெளிவு கொண்டே
    போவ அதனை விண்டே -நீரும்
    புகல! இரசிக்க! கண்டே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அழகிய கவிதைக்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  3. கண் சிமிட்டும் பூவை ரசித்தேன் !
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டை ரசிக்கவில்லையா...?...(

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  4. பெண்களின் கண்கள் புதுமையான பூ தானே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தானே ஸ்கூல் பையன்...

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. “தேனுகர் வண்டு மதுதனை உண்டு
    மயங்கியே கிடந்ததைக் கண்டு
    தானதைச் சம்பு வின்கனி யென்று
    தடங்கையி லெடுத்துமுன் பார்த்தாள்!
    வானுறு மதியம் வந்ததென் றெண்ணி
    மலர்க்கரங் குவியு மென்றஞ்சிப்
    போனது வண்டோ, பறந்ததோ பழந்தான்
    புதுமையோ விதுவெனப் புகன்றாள்“
    பழம்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
    உங்கள் பாணியில் கவிதை அருமை கவிஞரே!!!
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. பூவையின் முகத்தை மதியம் என்று எண்ணி விட்டதா.... வண்டு?
      பாவம் பெண்.... கனி பறந்ததோ என்று கலங்கி விட்டாளே...

      அருமையான பாடலைப் படிக்க தந்தமைக்கு மிக்க நன்றி கவிஞர்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தினேஷ்குமார் ஐயா.

      நீக்கு
  7. ஏமாந்த வண்டுபோல் ஆனேன் கவிதையின் அளவு கண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சோ.....

      கில்லர் ஜி.... சுறுங்கச் சொல்லி விளங்க வைப்பதே கவிதைக்கு அழகு. அதனால் தான்......
      ( நிறைய எழுத மண்டையில் சரக்குக் கம்மியாயிடுச்சின்னு நினைக்கிறேன்.....ஜி)

      நன்றி கில்லர் ஜி.

      நீக்கு
  8. கவிதை படிக்க பிரமாதமாக இருக்கிறது ஆனால் மதுரைத்தமிழனுக்கு அந்த கவிதை சொல்லும் பொருளை விளக்கி விட்டு ஆயிரம் பொற்காசுகளை வாங்கி செல்லவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவதுங்க....

      கவிதையைத் திரும்ப ஒருமுறை படித்துவிட்டு ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து விடுங்கள் தமிழரே....

      பொற்காசுகளை எப்படி அனுப்புவீர்கள்....? எப்போது....?

      நீக்கு
  9. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. என் பாட்டை இரண்டே வார்த்தையில் சுறுக்கி சொல்லி விட்டீர்கள் ஐயா.

      நன்றி பித்தன் ஐயா.

      நீக்கு


  11. வணக்கம்!

    வண்ண விழிகளை வண்டு மலா்என்றே
    எண்ணி மயங்கியதை ஏற்றிடலாம்! - பெண்ணவளைக்
    காணும் பொழுதெல்லாம் கன்னல் பொழிலழகைப்
    பூணும் புலமை பொலிந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... அருமை.

      தங்களின் வருகைக்கும் அழகிய கவிதைக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  13. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
    மிக்க நன்றி சுரேஷ்.

    பதிலளிநீக்கு