தந்ததானா தானான தந்த
தானா தானான
தந்த தானா தானான
தனதான (ஒரு கலைக்கு)
அன்பில் ஆழ்வார்
வடிவோடு !
.
சிந்தைமேலே தீராமல்
வந்த பாவோ தேனான
செம்மை யோடே தேரேறி நடைபோடும் !
செம்பலாவாய் மாறாத
வின்ப மோடு ரீங்காரம்
தென்றல் போலே காதோரம் இசையாகும் !
தந்தையோனே நீங்காமல்
என்னை நீயே சேயான
தன்மை யோடே வாழ்நாளில் அருளேகு !
தங்கமாதாய் நீண்டோங்கு
மின்ப வாழ்வே வானோடு
தங்கும் மீனாய் நீந்தோடி மனமேவும் !
கந்தனாலே ஓங்காரம்
கண்ட தாலே தீதான
கந்தை யாகா வாழ்ந்தேற நலமாகும் !
கண்ணினாலே நேர்பார்வை
யுன்ற தாலே தீராத
கங்கை நீராய் ஆவோம்பு னிதமாக !
அந்தமானோன் தாராத
துன்ப நோயே தீயாக
அங்கம் மீதே போராடும் நிலையாகும் !
அன்புமீதே தேயாத
எண்ண மானோர் மாயாத
அன்பி லாழ்வார் வேலான வடிவோடு !
.
பாவலர் அருணா செல்வம்
23.05.2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக