சனி, 27 செப்டம்பர், 2014

கை வைத்தியம்!!


1. வாழைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி ஆகியவற்றை அரிந்து உப்பு மிளகு எலுமிச்சை சாறு சேர்த்து வாரம் மூன்று முறை உண்டுவர ஊளைச்சதை குறையும்.

2. பப்பாளிப் பழத்தை தினசரி சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

3. தினமும் உணவில் புர்ண்டு சேர்த்துக் வந்தால் உடம்பிலுள்ள கொலஸ்டிரால் குறைந்து உடல் கெட்டிபடும்.

4. தினமும் ஒரு கொத்து திராட்சைப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் அறவே நீங்கி விடும். அதனால் சளித் தொல்லையும் சரியாகும்.

5. உணவில் அடிக்கடி பாகற்காய் சேர்த்தால் குடலில் உள்ள புச்சிகள் செத்துவிடும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுபடும்.

6. வறட்டு இருமல், தொண்டைப்புண் ஆகியவை இருந்தால் வெந்நீரில் தேன் கலந்து பருகுங்கள். உடனே பலனளிக்கும்.

7. பசும்பாலில் மஞ்சள் பொடியும் மிளகுத்தாளும் போட்டுக் கொதிக்க விட்டு சூடாகக் குடித்தால் இருமல் சரியாகும். புண்ணான தொண்டைக்கு இதமாக இருக்கும்.

8. பனங்கற்கண்டைப் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் இருமல் குறையும்.

9. வல்லாரைக்கீரை மூளையிலுள்ள செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகமாக்குகிறது. ஆனால் அளவோடு உண்ணவும். அதிகமானால் தலைச்சுற்றல் மயக்கம் ஏற்படும்.

10. பித்த வெடிப்புகளைச் சரி செய்ய பாதங்களை வெந்நீரில் அமிழ்த்தி நன்றாகத் தேய்த்துக் கழுவிய பின், காய வைத்து மஞ்சள்துர்ள் கலந்த ஆமணக்கு எண்ணெயைத் தடவி ஒரு மணி நேரம் ஊறவிட்டு தேய்த்துக் கழுவவும். ஒரே வாரத்தில் பாதம் பட்டு போல் ஆகிவிடும்.

படித்ததைப் பகிர்ந்தேன்.

அருணா செல்வம்.

7 கருத்துகள்:

  1. அருமையான மருத்துவக் குறிப்புகள் !பகிர்வுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் என் தோழியே !வாழைத்தண்டு தேடி மனம் ஓடுகிறது இப்போது :)

    பதிலளிநீக்கு
  2. உணவே மருந்து... மருந்தே உணவு...
    அருமையான குறிப்புகள் தங்கை அருணா செல்வம்..
    பகிர்வுக்கு நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  3. அருமையான மருத்துவக் குறிப்புக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    இலகுவான மருத்துவக் குறிப்பு பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான குறிப்புக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. நல்ல குறிப்புகள்! தெரிந்தது என்றாலும்...மீண்டும் நினைவு படுத்திக் கொள்ள உதவியது! மிக்க நன்றி சகோதரி!

    பதிலளிநீக்கு
  7. நல்ல குறிப்புகள்... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு