வியாழன், 31 ஜனவரி, 2013

உதடுகள் ஒட்டக் கூடாது !!



நட்புறவுகளுக்கு வணக்கம்.

   முதலில் நான் எழுதிய இந்த மூன்று குறட்பாக்களையும் படியுங்கள். இதில் ஒரு சிறப்பு இருக்கிறது. இந்தச் சாதாரண பாடலை இவ்வளவு பெரியதாய் ஏன் சொல்கிறேன் என்றால் இந்த குட்டிக் குட்டி  குறள் வெண்பாக்களை எழுத எனக்கு மூன்று நாட்கள் ஆகியது.
   இப்பாவின் இலக்கணத்தைப் படித்ததும் நாமும் எழுதிப் பார்க்கலாமே என்று எழுதினேன். நீங்களும் படித்துப் பாருங்கள். 

  
இதன் பெயர் “இதழ் அகல் குறட்பா !!“

1.
அகரத்தை நன்றே அளித்திட்ட நாளின்
நிகழ்ச்சியை நெஞ்சே நினை!

2.
சாத்திரங்கள் சாற்றிய சங்கதியை நெஞ்சத்தில்
நாத்திகர்கள் ஏற்றால் நகை!

3.
நாட்டில் நலக்கேடாய் ஆட்சி நடந்ததை
ஏட்டில் இயற்றி இணை!


இதன் இலக்கணம்

1.  உதடுகள் குவியக் கூடாது.
2. உதடுகள் ஒட்டக்கூடாது
3. உ, , , , இவ்வெழுத்தக்கள் வரக்கூடாது.
4. ப, , , வர்க்கங்கள் வரக்கூடாது.

அதாவது வரக்கூடாத எழுத்துக்கள்

உ, ஊ, ஒ, ஓ. ஔ

கு, கூ,கொ, கோ, கௌ
-          ஙொ ஙோ,ஙௌ
சு, சூ, சொ, சோ,சௌ
- - ஞொ ஞோ, ஞௌ
டு, டூ,டொ, டோ, டௌ
ணு, ணுர் ணொ ணோ, ணேள
து, துர், தொ, தோ, தௌ
நு, நுர், நொ, நோ, நேள
, பா, பி, பீ. பு, பு. பெ, பே, பை, பொ, போ, பௌ, ப்
, மா. மி. மீ மு. மூ. மெ. மே. மை. மொ. மோ. மௌ. ம்
வ. வா. வி. வீ. வு. வு. வெ. வே. வை. வொ. வோ வௌ வ்
யு. யு. யொ, யோ, யௌ
ரு, ரூ ரொ. ரோ, ரௌ
லு. லுர். லொ, லோ, லௌ
ழு. ழு. ழொ. ழோ. ழௌ
ளு. ளுர். ளொ, ளோ. ளௌ
று, றுர் றொ, றோ, றௌ
னு, னுர். னொ, னோ, னௌ.
  
வரவேண்டிய எழுத்துக்கள்.

, ஆ. இ, ஈ. எ, ஏ ஐ,

, கா, கி, கீ. கெ, கே கை க்
, ஙா, ஙி, ஙீ, ஙெ, ஙே, ஙை, ங்
, சா, சி, சீ. செ. சே, சை, ச்
, ஞா, ஞி, ஞீ, ஞெ, ஞே, ஞை, ஞ்
, டா, டி. டீ, டெ, டே, டை, ட்
, ணா, ணி, ணீ, ணெ, ணே, ணை, ண்
, தா, தி, தீ. தெ, தே, தை, த்
, நா, நி, நீ, நெ, நே, நை, ந்
, யா, யி, யீ, யெ, யே, யை, ய்
, ரா, ரி, ரீ, ரெ, ரே, ரை, ர்
, லா, லி, லீ, லெ, லே, லை, ல்
, ழா, ழி, ழீ, ழெ, ழே, ழை, ழ்
, ளா, ளி, ளீ, ளெ, ளே, ளை, ள்
, றா, றி, றீ, றெ, றே, றை, ற்
, னா, னி, னீ, னெ, னே, னை, ன்

முக்கியமாக “குறள் வெண்பாஇலக்கணத்தில் எழுத வேண்டும்.

அருணா செல்வம்.
01.02.2013

(முக்கியமா... நான் இதில் தவறேதும் செய்திருந்தால் அவசியம் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றி.)