வெள்ளி, 29 நவம்பர், 2013

சுட்டிப் பெண்!!




சுட்டிப் பெண்ணே! சொல்லமுதே!
      சொக்கத் தங்கத் தமிழ்த்தேனே!
எட்டி நின்றே பார்த்தாலும்
      என்னை ஏதோ செய்பவளே!
குட்டி போட்ட  பூனைபோல
      விட்டே அகல முடியாமல்
கட்டிப் போட்டு விட்டாயோ
      காதல் கயிறு கொண்டென்னை?

மொட்டு விரிய மணம்வீசும்!
      மூடி வைத்தால் மனமேங்கும்!
சிட்டு போல பறப்பவளே!
      சிந்தை நனைய வைத்தவளே!
இட்டுக் கட்டி விடும்பாட்டில்
      இனிய கருவைத் தருபவளே!
சொட்டுத் தேன்போல் கவியினிக்க
      சொல்லேன் அன்பாய் ஒருவார்த்தை!

தீட்டு கின்ற கவிகளிலே
      தெளிவாய் நீதான் தெரிகின்றாய்!
மூட்டும் மோக உணர்வினிலும்
      முன்னால் வந்து வதைக்கின்றாய்!
மீட்டும் இசையோ தெரிவதில்லை
      மென்மை இதயம் உணருமடி! 
ஏட்டுச் சுரைகாய் இல்லையடி!
      எழுதும் கவிகள் உண்மையடி!

அருணா செல்வம்.

10.05.2012

31 கருத்துகள்:

  1. வணக்கம்
    கவிதை அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  2. அருமையாய் எழுதி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அற்புதமான கவிதைகளுக்கு
    ஆதாரமான அவள் வாழ்க
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவள் வாழட்டும்!

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  5. சொட்டுச்சொட்டாக தேனைச் சுவைப்பதுபோல் உள்ளது.அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா....!

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  6. காதலால் கசிந்துருகி எழுதியிருக்கிறீர்கள்..அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க. அதனால ரொம்ப இளைச்சி போயிட்டேன். ஹா ஹா ஹா

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவியபெருமாள் ஐயா.

      நீக்கு
  7. சுட்டிப்பெண் அருமை ... யாராக இருக்கும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என் போன ஜென்மத்து காதலி!!

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அரசன்.

      நீக்கு
  8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  9. அழகான கவிதை...
    வாழ்த்துக்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  10. எழுதும் கவ்கள் உண்மைதான்,சுட்டிப்பெண்ணி கடைக்கண் பார்வை கயிறாக கட்டிப்போட்டிருக்கிறதென்றால் பார்வையின் பலம் இங்கே ஜஸ்தியாகிப்போனது/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி விமலன் ஐயா.

      நீக்கு
  11. உண்மையான அழகு என்பது இது தான்!
    க+

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ... பொய்யான அழகு என்பது எது நம்பள்கி?

      நன்றி நம்பள்கி.

      நீக்கு
  12. இட்டுகட்டி விடும் பாட்டில் -------- ஏட்டு சுரைக்காய் இல்லையடி !!!!!

    கொஞ்சம் நயம் !!!

    பதிலளிநீக்கு
  13. இட்டுக் கட்டி விடும்பாட்டில் -----------ஏட்டுச் சுரைகாய் இல்லையடி!

    கொஞ்சம் நயம் !!! அதிகம் !!!!!

    பதிலளிநீக்கு